Monday, January 24, 2011

புலம்பல்

 பருவச் சிறையில்
அடைபட்டு கிடந்தேன்
என்னை
இதய கூண்டுக்கு
இடம் மாற்றினாய்

உருவச் செழிப்பில்
உலவி வந்தேன்
உன்
உள்ள அழகில்
மயக்கி விட்டாய்

உறவுத் திமிரில்
சுற்றித் திரிந்தேன்
என்னை
தாலிக் கயிற்றில்
தனிமை படுத்தினாய்

இரவும் பகலும்
ஆட்சி செய்தாய்
உன்
இல்லத்து அரசியாக
மாட்சிமை தந்தாய்

கற்பின் பெருமையை
காத்து நின்றேன்
என்னை
கருவுறச் செய்து
கெளரவம் அளித்தாய்

குழந்தை பெற்று
தாய் ஆனேன்
உன்
குலம் காக்க
பாடு பட்டாய்

பிள்ளை சிரிப்பில்
ஆனந்தம் கண்டேன்
என்
அன்பு களிப்பில்
பேரின்பம் கண்டாய்

மக்களை வளர்த்து
மக்கள் ஆக்கினேன்
உன்
பேரக் குழந்தைகளுக்கு
பாட்டி ஆக்கினாய்

வாழ்ந்த களைப்பில்
வக்கனையாய் பேசினேன்
என்னை
போற்றி புகழ்ந்து
புவி நீங்கினாய்

எல்லாம்
விட்டுச் சென்றாய்
என் தெய்வமே
எனை விட்டு
நீ மட்டும்
எங்கு சென்றாய் !


Tags: girl,woman,husband,tamil,kavi,kavithai,poem

3 comments: