Monday, January 24, 2011

தாய்


இறுமாப்பு
அடைந்து கொள்
நான்
இத்தனை
சிறுமைப்பட்டு கிடந்தது
உன்னிடம் மட்டும் தான் !

பெருமிதம்
கொண்டு மகிழ்கிறேன்
என்னை
இவ்வளவு
பெரியவனாகியவள்
நீ தான் என்று !

வெட்கி
தலை குனியட்டும் 
உன்
முதுமைக்கு
ஒரு தீர்வும்
காணாத உலகம்

கொலைப் பழி
ஏற்கட்டும்
உன்னை
என்
கண் முன்னே
கொன்று சென்ற இயற்கை

என்
கண்ணீரை
துடைக்க வரும்
வெறுமையை கண்டு
திகைக்கிறேன்
உன் குரல்
கேட்பது போன்று !

3 comments:

  1. From Dr.Akila minor..nice.congrats..keep it up.

    ReplyDelete
  2. nice dear siru thirutham(பெரியவனாகியவள்)..

    ReplyDelete