மனமே
துணிவு கொள்
மலை அல்ல
மடு என்று
பணியச் சொல்
நினைவில்
நிறுத்திக் கொள்
நீர் அல்ல
நெருப்பு என்று
நெஞ்சை
நிமிர்த்தி செல்
கொஞ்சம்
அசந்தால் கூட
உனக்கு
கொல்லி வைக்கும்
உலகம்
கொஞ்ச
நேரத்திற்கு ஒருமுறை
உன்னை
கிள்ளி பார்த்து
தெளியும்
எங்கே
உன்
போர் வாள்
எடுத்து
வைத்துக் கொள்
உலகமே
ஒரு போர்க்களம்
எங்கே
உன்
பாதுகாப்பு கேடயம்
கையில்
எடுத்துக் கொள்
வாழ்க்கையே
ஒரு போராட்டம்
தனக்கே தான்
அந்நியம் ஆவான்
என்றும்
கெஞ்சி வாழ்பவன்
உலகுக்கே உன்னை
எதிரி ஆக்குவான்
பயம்
உனக்கு நீயே
புகட்டிக் கொள்ளும்
நஞ்சு
பணிவு
தனக்கு தானே
அடித்துக் கொள்ளும்
சவுக்கு
உனக்கு
யாரும் இல்லையென
எண்ணாதே
உனக்காக
நீயே உள்ளாய்
என்பதே உண்மை
துணைக்கு
சொந்தம் இல்லையென
சோர்ந்திடாதே
தூண் போன்று
தோள்கள் இருப்பதே
சுமை தூக்கத்தான்
ஒவ்வொரு நொடியும்
கொடுத்துக் கொண்டிரு
ஊக்க மருந்து
இல்லையேல்
உள்ளம்
ஏங்கி ஏங்கியே
தூங்கி போய்விடும்
நிரந்தரமாய் !