நான் கழுதை
பொதி சுமக்கிறேன்
என் முதலாளிக்காக
அவன் மனிதன்
துணி வெளுக்கிறான்
பண முதலைகளுக்காக !
அனாதை
மட்டும் தான்
யாரையும்
அழ வைக்காமல்
சாகும்
வரம் பெற்றவன் !
நாட்கள் தான்
வயதின் கணக்கீடு
இல்லையேல்
மரணம் மட்டுமே
வாழ்க்கையின் குறுக்கீடு !
Tags: sweet drops,age,tamil,poem
No comments:
Post a Comment