நான் ஊமையாகி
எனக்குள் ஊனமாகி
நல்ல
பெயர் எடுக்க
எண்ணும் உள்ளங்கள்
உண்மை விரும்பியாகி
என்றும் நேர்மையாகி
தனக்கு
இனியவனாக இருக்க
நினைக்கும் உறவுகள்
உன்
வீட்டு வீதியை
நான்
சத்தமில்லாமல்
கடக்க விரும்புகிறாய்
என்
வீட்டு வாசலில்
நீ
சத்தம் போட்டு
நின்று செல்கிறாய்
உன்
கட்டளைகளை கேட்டு
நான்
அடி பணிந்து
நடக்க ஆசைப்படுகிறாய்
என்
கதறல்களை கண்டு
நீ
காது கேளாமல்
கடந்து போய்விடுகிறாய்
நான்
தலை குனிந்து
நடந்தால்
தம்பி என்கிறாய்
நான்
தலை நிமிர்ந்து
நடந்தால்
தறுதலை என்கிறாய்
நீ
பார்த்ததும்
நிற்க வேண்டும்
என்று
எதிர் பார்க்கிறாய்
உன்னை
பார்த்ததும்
பேச வேண்டும்
என்று
பழக சொல்கிறாய்
இருந்தும்
இல்லாமல் வாழும்
என்
இறுக்கமான வாழ்க்கை
பொருத்தமானது உனக்கு
என்றும்
நடை பிணமாய்
இருந்தால்
வருத்தம் கொடுக்காதவன்
நான் உனக்கு
என் வீட்டு
உணவு பொருட்கள்
நீ
வாங்கும் கடையில்
இருப்பது உண்மை
என் வரிசை
உனக்கு பின்னால்
எப்போதும்
இருந்திட நினைப்பது
என்ன கொடுமை
உனக்கும் எனக்கும்
உயிர் வாழும்
காலம்
ஒன்று தான்
நீயும் நானும்
இருக்க வேண்டிய
உலகம்
ஒன்று தான்
உனக்காக
விட்டு கொடுக்கும்
தண்டனையாய்
எனக்கான
வயதை இழக்கிறேன்
உனக்காக
இடத்தை பறிக்கும்
பாதகமாய்
எனக்கான
உலகை மறுக்கிறாய்
இப்படி
ஒரு வாழ்க்கையில்
எப்படி
இணைந்தோம் இருவரும்
எப்படியும்
ஒரு தாயின்
வயிறு தான்
உலகத்தின் சூட்சமம்
அதுப்படி
அண்ணன் தம்பி
பிரிவு தான்
உறவுகளின் ஆரம்பம்
என்றாவது
நினைத்து பார்த்ததுண்டா
என்னை
உன் சகோதரனாக
என்றுமே
எண்ணுவது என்ன
நான்
உனக்கு சகோதரனாகிட !
Wednesday, August 24, 2011
Wednesday, August 17, 2011
நயவஞ்சகம்
விழிகளில் வரும்
நடுக்கம்
வார்த்தைகளில் வரும்
தடுமாற்றம்
புதிதாய் தோன்றும்
பாசம்
புதிராய் தோன்றும்
பழக்கம்
உணர முடிகிறது
ஒரு
உண்மை ஊமையாகி
கொண்டிருப்பதை
நினைவில் தெரிகிறது
ஒரு
செயற்கை தனம்
செயற்கரியதாய்
உயிர் வாழும்
போராட்டம்
உரிமை மீறலின்
நீரோட்டம்
உறவை தேடும்
உள்ளம்
தவறை மறைக்க
தஞ்சம்
கொஞ்சல்
அஞ்சி அஞ்சி
கேட்கும்
அன்பு கெஞ்சல்
குழைவு
மிதம் மிஞ்சி
போகும்
பாவ மன்னிப்பு
முடியா தென்றால்
லஞ்சம்
முடியம் என்றால்
தண்டம்
கிடைக்கா தென்றால்
பொதுநலம்
கிடைக்கும் என்றால்
சுயநலம்
நீதி
நிறைய தடவை
செத்து போவது
சாமானியனின்
சகிப்புதனத்தில் தான்
நேர்மை
நேரத்திற்கு நேரம்
சீர்கெட்டு போவது
ஏழையின்
வாழ்க்கையில் தான்
சூன்யம்
வைக்க எண்ணும்
ஒரு
சூன்ய வாழ்க்கை
சாமிக்கு
சீட்டு கட்டும்
சில்லறை
சொந்தத்தின் சோகம்
விடியல்
வரவில்லை என்றால்
தடியெடுத்து
அடிக்கும் அபாயம்
புதையல்
கிடைக்கவில்லை என்றால்
பகைமையை
தோண்டும் பேராபத்து
மனிதன்
மிருகம் ஆகிறான்
மக்கள்
மாக்கள் ஆகின்றனர்
அறிவு
குறைபட்டு போனதால்
அன்பு
பிழைபட்டு போகிறது !
நடுக்கம்
வார்த்தைகளில் வரும்
தடுமாற்றம்
புதிதாய் தோன்றும்
பாசம்
புதிராய் தோன்றும்
பழக்கம்
உணர முடிகிறது
ஒரு
உண்மை ஊமையாகி
கொண்டிருப்பதை
நினைவில் தெரிகிறது
ஒரு
செயற்கை தனம்
செயற்கரியதாய்
உயிர் வாழும்
போராட்டம்
உரிமை மீறலின்
நீரோட்டம்
உறவை தேடும்
உள்ளம்
தவறை மறைக்க
தஞ்சம்
கொஞ்சல்
அஞ்சி அஞ்சி
கேட்கும்
அன்பு கெஞ்சல்
குழைவு
மிதம் மிஞ்சி
போகும்
பாவ மன்னிப்பு
முடியா தென்றால்
லஞ்சம்
முடியம் என்றால்
தண்டம்
கிடைக்கா தென்றால்
பொதுநலம்
கிடைக்கும் என்றால்
சுயநலம்
நீதி
நிறைய தடவை
செத்து போவது
சாமானியனின்
சகிப்புதனத்தில் தான்
நேர்மை
நேரத்திற்கு நேரம்
சீர்கெட்டு போவது
ஏழையின்
வாழ்க்கையில் தான்
சூன்யம்
வைக்க எண்ணும்
ஒரு
சூன்ய வாழ்க்கை
சாமிக்கு
சீட்டு கட்டும்
சில்லறை
சொந்தத்தின் சோகம்
விடியல்
வரவில்லை என்றால்
தடியெடுத்து
அடிக்கும் அபாயம்
புதையல்
கிடைக்கவில்லை என்றால்
பகைமையை
தோண்டும் பேராபத்து
மனிதன்
மிருகம் ஆகிறான்
மக்கள்
மாக்கள் ஆகின்றனர்
அறிவு
குறைபட்டு போனதால்
அன்பு
பிழைபட்டு போகிறது !
Sunday, August 7, 2011
உங்கள் விமர்சங்களுடன் நமது முதல் புத்தக படைப்பு
அன்பு நண்பர்களே
எனது இடைவிடாத வேலை பளு என் எழுத்து பணியில் சிறிது இடைவெளியை ஏற்ப்படுத்தி விட்டது . இப்போது எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் என் தந்தைக்கு அறுபத்தியொரு கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட ஆசைப்பட்டேன் . ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் அதன் எண்ணிக்கையை இருபத்தி எட்டாக குறைத்து விட்டு ( கண்ணீர் முத்துக்கள் 28 ) இதர தத்துவ கவிதைகளை இணைத்து ( கற்ற தத்துவங்கள் 61 ) கண்ணீர் அஞ்சலியுடன் ( அஞ்சலி 1 ) கட்டளைகள் பத்தாக ( கட்டளைகள் 10 ) என் முதல் தொகுப்பை வெளியிடும் வேலைகளை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க நினைக்கிறேன் .
அதனால் உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் , நீங்கள் தான் எனது முதல் விமர்சகர்கள் , உங்களின் பங்களிப்பையும் நான் எதிர்பார்க்கிறேன் . என்னால் முடியும் என்றால் உங்கள் அன்பு கரங்களின் ரேகை அச்சுகளையாவது என் புத்தகத்தில் வெளியிட விரும்புகிறேன். அதற்கு
1. உங்களுக்கு பிடித்த என் கவிதைகளை வரிசைப்படுத்தி உங்கள் கருத்துகளை, வாழ்க்கை நினைவுகளுடனான என் கவிதை தாக்கங்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். நம் அழகு தமிழில் மட்டும் எழுதி அனுப்புங்கள். ரத்தின சுருக்கமாக எழுதி அனுப்புங்கள் . தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.
2. என் கவிதைகளுக்கான கருத்துகள் நிறைந்த புகைப்படங்கள் உங்களிடம் இருக்கும் என்றால் அதைபற்றிய வில்லங்கம் இல்லாத (copy write issue ) விளக்கங்களுடன் எனக்கு அனுப்புங்கள் . எந்த கவிதைக்கான புகைப்படம் என்பதை குறிப்பிட்டு அனுப்புங்கள். தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.
எனது email address: visvatamil@gmail.com
உங்கள் அனைத்து எண்ணங்களையும் எனக்கு மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்புகள் . எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உங்கள் இனிய நண்பன்.
எனது இடைவிடாத வேலை பளு என் எழுத்து பணியில் சிறிது இடைவெளியை ஏற்ப்படுத்தி விட்டது . இப்போது எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் என் தந்தைக்கு அறுபத்தியொரு கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட ஆசைப்பட்டேன் . ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் அதன் எண்ணிக்கையை இருபத்தி எட்டாக குறைத்து விட்டு ( கண்ணீர் முத்துக்கள் 28 ) இதர தத்துவ கவிதைகளை இணைத்து ( கற்ற தத்துவங்கள் 61 ) கண்ணீர் அஞ்சலியுடன் ( அஞ்சலி 1 ) கட்டளைகள் பத்தாக ( கட்டளைகள் 10 ) என் முதல் தொகுப்பை வெளியிடும் வேலைகளை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க நினைக்கிறேன் .
அதனால் உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் , நீங்கள் தான் எனது முதல் விமர்சகர்கள் , உங்களின் பங்களிப்பையும் நான் எதிர்பார்க்கிறேன் . என்னால் முடியும் என்றால் உங்கள் அன்பு கரங்களின் ரேகை அச்சுகளையாவது என் புத்தகத்தில் வெளியிட விரும்புகிறேன். அதற்கு
1. உங்களுக்கு பிடித்த என் கவிதைகளை வரிசைப்படுத்தி உங்கள் கருத்துகளை, வாழ்க்கை நினைவுகளுடனான என் கவிதை தாக்கங்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். நம் அழகு தமிழில் மட்டும் எழுதி அனுப்புங்கள். ரத்தின சுருக்கமாக எழுதி அனுப்புங்கள் . தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.
2. என் கவிதைகளுக்கான கருத்துகள் நிறைந்த புகைப்படங்கள் உங்களிடம் இருக்கும் என்றால் அதைபற்றிய வில்லங்கம் இல்லாத (copy write issue ) விளக்கங்களுடன் எனக்கு அனுப்புங்கள் . எந்த கவிதைக்கான புகைப்படம் என்பதை குறிப்பிட்டு அனுப்புங்கள். தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.
எனது email address: visvatamil@gmail.com
உங்கள் அனைத்து எண்ணங்களையும் எனக்கு மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்புகள் . எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உங்கள் இனிய நண்பன்.
Saturday, August 6, 2011
சிறை பறவை
சிறைப்பட்டு கிடக்கும்
என்
சட்ட விரோத
சாமானிய சிந்தனைகள்
அடைப்பட்டு கிடக்கும்
என்
அறிவுக்கு புறம்பான
ஆசைக் கனவுகள்
சந்தர்ப்ப சூழல்களில்
சத்தமின்றி
தலை காட்டும்
தவறான எண்ணங்கள்
சம்மதம் கிடைத்தால்
சத்தியமாக
மொத்தமாய் மூழ்கடிக்கும்
மூர்க்கக் குணங்கள்
புரையோடிய புண்கள்
ஆறாத வடுக்கள்
என்
உடலின் பலவீனம்
உள்ளத்தின் சுகவீனம்
தத்திதத்தி நடக்கிறேன்
தவறெது சரியெது
என்ற
சந்தேகம் கொண்டு
தடுமாறி விழுகிறேன்
தடவி எழுகிறேன்
நடை
பாதை பழக்கமின்றி
ஆசைக்கும் பேராசைக்கும்
அடமானம் வைக்கிறேன்
என்
அறிவையும் தெரிவையும்
நன்மையும் தெரியும்
உண்மையும் தெரியும்
நம்பிக்கை நாணயம்
நன்றாக தெரியும்
கணநேர நினைவுகள்
என் கனவுகள்
அழிக்கும் அவலம்
அனைத்தும் அறிவேன்
விடுதலை புதிர்
விடுபடாத புதர்
காடாய் தெரியும்
கேடின் சிறை
சிறைக் கம்பிகளுக்கு
இடையே
அறையப்பட்டு நிற்கும்
குற்றவாளி கைதி
காவல் அதிகாரியாய்
கவனித்து கொண்டு
இருக்கும்
கம்பிகளின் மறுபக்கம்
இருபுறமும் தெரிகிறேன்
ஒரே உருவத்தின்
வெவ்வேறு பிம்பங்களில்
மாறுபட்ட மனிதனாய்
யாரிடம் உள்ளது
பூட்டை திறக்கும்
சாவி
புரியவில்லை எனக்கு
பொறுமை கடந்தால்
பூட்டிய கதவுகள்
உடைக்கப் படுமா
விடையில்லை இன்னும்
எல்லை மீறி
எல்லாம் முடிந்ததும்
எண்ணிப் பார்த்து
திகைக்கிறேன்
எப்போது பறந்தது
என்
சிறைப்பறவை
சட்டத்தை உடைக்க
மீண்டும் அடைத்து
விட்டு
விழித்து நிற்கிறேன்
என்று பறக்குமென்று !
என்
சட்ட விரோத
சாமானிய சிந்தனைகள்
அடைப்பட்டு கிடக்கும்
என்
அறிவுக்கு புறம்பான
ஆசைக் கனவுகள்
சந்தர்ப்ப சூழல்களில்
சத்தமின்றி
தலை காட்டும்
தவறான எண்ணங்கள்
சம்மதம் கிடைத்தால்
சத்தியமாக
மொத்தமாய் மூழ்கடிக்கும்
மூர்க்கக் குணங்கள்
புரையோடிய புண்கள்
ஆறாத வடுக்கள்
என்
உடலின் பலவீனம்
உள்ளத்தின் சுகவீனம்
தத்திதத்தி நடக்கிறேன்
தவறெது சரியெது
என்ற
சந்தேகம் கொண்டு
தடுமாறி விழுகிறேன்
தடவி எழுகிறேன்
நடை
பாதை பழக்கமின்றி
ஆசைக்கும் பேராசைக்கும்
அடமானம் வைக்கிறேன்
என்
அறிவையும் தெரிவையும்
நன்மையும் தெரியும்
உண்மையும் தெரியும்
நம்பிக்கை நாணயம்
நன்றாக தெரியும்
கணநேர நினைவுகள்
என் கனவுகள்
அழிக்கும் அவலம்
அனைத்தும் அறிவேன்
விடுதலை புதிர்
விடுபடாத புதர்
காடாய் தெரியும்
கேடின் சிறை
சிறைக் கம்பிகளுக்கு
இடையே
அறையப்பட்டு நிற்கும்
குற்றவாளி கைதி
காவல் அதிகாரியாய்
கவனித்து கொண்டு
இருக்கும்
கம்பிகளின் மறுபக்கம்
இருபுறமும் தெரிகிறேன்
ஒரே உருவத்தின்
வெவ்வேறு பிம்பங்களில்
மாறுபட்ட மனிதனாய்
யாரிடம் உள்ளது
பூட்டை திறக்கும்
சாவி
புரியவில்லை எனக்கு
பொறுமை கடந்தால்
பூட்டிய கதவுகள்
உடைக்கப் படுமா
விடையில்லை இன்னும்
எல்லை மீறி
எல்லாம் முடிந்ததும்
எண்ணிப் பார்த்து
திகைக்கிறேன்
எப்போது பறந்தது
என்
சிறைப்பறவை
சட்டத்தை உடைக்க
மீண்டும் அடைத்து
விட்டு
விழித்து நிற்கிறேன்
என்று பறக்குமென்று !
Subscribe to:
Posts (Atom)