வறுமைக்கு பிறந்தவன்வாழத் துடிக்கிறான்
வாடியப் பின்னும்
ஓடி வருகிறான்
ஒரு வேளை
உணவு தான்
அவனது நோக்கம்
ஒரு நாளைய
உயிர் தான்
அவனது ஏக்கம்
தினம் தினம்
செத்து பிழைக்கிறான்
தெரிந்திருந்தும்
சாக மறுக்கிறான்
என்றாவது ஒருநாள்
வாழ்வோம் என்றல்ல
எப்படி சாவது
என்ற கவலையில்
எலும்புகள் சொல்லும்
ஏழ்மையின் கொடுமை
யாருக்கு தெரியும்
ஏழையின் நிலைமை
இந்த சுவர்கள்
செப்பனிடப்பட வேண்டும்
ஒரு நல்ல
சித்திரம் எழுத
இந்த கரங்கள்
ஏற்கப்பட வேண்டும்
ஒரு வலிமையான
உறவுகள் அமைய !
Tags: poor,poor peoples,at war,tamil,kavi,kavithai,poem
No comments:
Post a Comment