Monday, January 31, 2011

கூடா நட்பு


மனம்
ஒரு குரங்கு

நேரத்திற்கு நேரம்
வேறுபட்ட சிந்தனைகளுக்கு
தாவிச் செல்லும் 

வயது
இரண்டும் கெட்டான்

உடலின் இச்சைக்கும்
மனதின் ஆசைக்கும்
அறிவை ஆட்டுவிக்கும்

உன்னோடு
நான் பேசினால்
என்னோடு
நீ பேசினால்
ஊர் தவறாக
நினைப்பது இருக்கட்டும்

நீயும் நானும்
நம்
எண்ணங்களுக்கு  
கடிவாளம் இடும்
சக்தி பெற்றவர்களா

பழக்கத்தில்
ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டாலும்

பருவத்தில்
உருவத்தை பார்க்காத
உள்ளம் உண்டா

நம்
பார்வையில் தவறில்லை
நம்
பேச்சில் தவறில்லை
நம்
செயலில் தவறில்லை
நம்
இருவருக்கும் இடையில்

நம்
எண்ணங்களில் இச்சையுண்டு
நம்
வார்த்தைகளில் இளமையுண்டு
நம்
பகிர்தலில் எல்லாமுண்டு
நம்
இருவரைப் பற்றியும்

ருசிகண்ட
சிங்கத்திருக்கு
முதலாளியின் இரத்தம்
வேறல்ல - அது
அதனுடைய தவறும்
அல்ல

நாம் மிருகம்
அல்ல
மனிதர்கள் தான்
பகுத்தறிவுடைய நாம்
மாக்கள் அல்ல
மக்கள் தான்

உடல் தான்
உயிரின் ஆதாரம்
பருவம் தான்
உடலின் சேதாரம்

இளமை தான்
இனத்தின் விருத்தி
வாலிபம் தான்
வலிமையின் மூர்த்தி

இத்தனையும் உணர்ந்து
ஒரு
உத்தமமான நட்பு
கொண்டோம்

எந்த ஒரு
தவறும் இல்லாமல்
இனிமையான சிநேகம்
கொண்டோம்

என்
பிரியமான தோழியே
உயிர் கொடுத்த
தாய் தந்தைக்கே
தாலி கட்டியப்பின்
உன் மீது
உரிமை குறைவென்றால்

நானெல்லாம்
உள்ளத்தை கூட
சிநேகமாகத் தானே
தந்தேன்
உன் மீதான
உரிமை என்னடி
எனக்கு

என்
உள்ளத்தையே
நண்பனாக தந்தேன்
உனக்கு
நட்பை
பிரியும் வேளை
நரகம் அன்றோ
எனக்கு !


Tags: Girl Friend, impossible relation ship, true and false

கா.தலைவன் - 3 ( நட்பு )


ஐந்து
வயது வரை
அன்னையின்
மடி சுகம்

பத்து
வயது வரை
தந்தையின்
தோள் சுகம்

பார்த்தது முதல்
இன்று வரை
நண்பனின்
அன்பு மட்டும்
என்றும் சுகம்

உன்னை
நான் காண
என்னோடு
ஊர் சுற்றியவன்
அவன் தான்

உன் விலாசம்
தேடுவதற்கு
எனக்கு
துணை நின்றவன்
அவன் தான்

எனக்காகவே
உன்னை தனது
தங்கையாக
உறவு கொண்டாடியவன்

உனக்காகவே
என்னை தனது
மச்சியாக
மாற்றிக் கொண்டவன்

ஒரு தட்டில்
இருவரும்
உண்ட நாட்கள்
இன்றும் உள்ளன

ஒருவர் தோளில்
ஒருவர் கைப்போட்டு
சென்ற தூரங்கள்
என்றும் நினைவில்

பணம் பணம்
என்று கேட்கும்
உலகில் - அவன்
ஒருவன் மட்டும்
விதி விலக்கு

தினம் தினம்
நான் கேட்காமலே
தருவதில் - அவன்
இருவேறு எண்ணம்
இல்லாது போனவன்

என்
தலை முறையின்
முதல் உறவினன்
அவன்

என்றும்
விலகி செல்லாமல்
வெளியிலிருந்து ஆதரவு
தருபவன்

என்
இதயத் தடாகத்தில்
பூத்த
செந்தாமரை நீ

அவன்
இலைகளை எதிர்பார்க்காமல்
வேர்களுக்கு வலுவேற்றும்
வற்றாத நீர்

நல்ல 
நட்பின் ஓடத்தில்
நம்பி ஏறியவன்
வாழ்க்கை
என்றும்
வெற்றி தான் !


Tags: friendship, friends, good friend

Sunday, January 30, 2011

துளிகள் - 3


நான் கழுதை
பொதி சுமக்கிறேன்
என் முதலாளிக்காக

அவன் மனிதன்
துணி வெளுக்கிறான்
பண முதலைகளுக்காக !


அனாதை
மட்டும் தான்
யாரையும்
அழ வைக்காமல்
சாகும்
வரம் பெற்றவன் !


நாட்கள் தான்
வயதின் கணக்கீடு
இல்லையேல்
மரணம் மட்டுமே
வாழ்க்கையின் குறுக்கீடு !


Tags: sweet drops,age,tamil,poem

கா.தலைவி - 3 (சலனம்)


அகல் விளக்கின்
திரி -

இருந்தால்
எண்ணையை எரிக்கும்
இல்லையேல்
தன்னை தானே
எரித்துக் கொள்ளும்

அருகில்
இருப்பவர்கள் மேல்
ஆதங்கப்பட்டேன்
அவர்கள்
இல்லாத போது
வேதனைப்பட்டேன்

மின்னி மறைந்தது
அவன் முகம்
மீளாத் துயரத்தில்
என் மனம்

அனிச்சையாய் ஒதுக்கினேன்
என் கூந்தலை
அவன் பார்ப்பதாய்
ஒரு ஞாபகம்

அதிசயமாய் இன்று
அலுவல்கள்
சுமையாய் தெரிகிறது

ஆச்சர்யமாய் எனக்கு
அலுவலகமே
ஆனந்தமாக தெரிகிறது

வேலையில்
இருந்து கொண்டு
அவன்
விழிகளைப் பற்றி
யோசித்தேன்

மூலையில்
நின்று கொண்டு
அவன்
முக மாற்றத்தை
சிந்தித்தேன்

முதல் முறையாக
தற்காலிக மறதி
தொற்றிக் கொண்டது

விதி விலக்காக
பார்பவரைக் கண்டு
சிரிக்கத் தோன்றியது

அடிக்கடி
நான் கைப்பையை
திறந்து மூடினேன்

அடிக்காத
சுவர் கடிகாரத்தை
வேடிக்கை பார்த்தேன்

வலிகள்
வரத்தான் செய்கிறது
வயது தான்
உணர மறுக்கிறது

கோபம்
கொள்ளத்தான் செய்கிறேன்
குழப்பம் அதை
கொன்று செல்கிறது

ஏன்
என்னை பார்கிறான்
என்று வருந்துகிறேன்

நாளையும்
அவன் பார்த்திட
நான் விரும்புகிறேன்

நான்
ரசிக்கப் படுகிறேன்
என்ற ஆனந்தம்
என்னை
ஒருவன் ரசிக்கிறான்
என்ற ஆதங்கம் 

என்னை நானே
இரு கூறாக்கினேன்
தந்தையின்
தன்மானத்திற்கும்
அவனின்
சன்மானத்திற்கும் !


Tags : lady affection, official love, tamil, kavi, poem

பிச்சைக்காரன்

முதல் முறை
கையேந்தினேன்
பிச்சை கேட்டு
இறுதி முறை
எச்சரித்த
தன்மானம் விட்டு

முறைப்பவன் பற்றி
கவலை இல்லை
என்
இரைப்பை பசி
தீர வேண்டும்

வெறுப்பவன் கண்டு
வெட்கம் இல்லை
என்
இன்றைய நாள்
ஓட வேண்டும்

தற்கொலை
செய்து கொள்ள
சட்டம் இல்லை
கொலை செய்வதற்கு
அனுமதி இல்லை

தொழில் செய்வதற்கு
ஏதும் இல்லை
சும்மா இருந்தால்
தொல்லை இல்லை

பிச்சை
எனக்கு என்னை
எதிரியாக்கும்
பணம்
இந்த ஊருக்கு
என்னை விரோதியாக்கும்

எப்போதும்
காய்ந்த தட்டும்
துவைக்காத
கந்தல் துணியும்
இப்போது
என் சொத்து

இதை
பார்ப்பவனும் இல்லை
பறிப்பவனும் இல்லை

உற்று நோக்க
யாரும் இல்லாத
உயிருள்ள குப்பை
நான்

உரக்க பேச
ஏதும் இல்லாத
உணர்வற்ற உயிர்
நான்

பிறக்கும் போது
நான்
பிச்சைக்காரன் இல்லை
இப்போது
நான்
பணக்காரன் இல்லை

இடைப்பட்ட வாழ்க்கையில்
நிம்மதி இல்லை
நிம்மதி இல்லமால்
வாழ்வதற்கும்
தகுதி இல்லை

அடிமட்ட
ஏழையும் போராடுகிறான்
நடுத்தர
வர்கத்திலும் போராடுகிறான்

மேல்மட்ட
பணக்காரனும் போராடுகிறான்
மிதிபட்டு
நானும் போராடுகிறேன்

அவர்கள்
ஒருவரை ஒருவர்
அழித்துக் கொள்ள
போராடுகிறார்கள்

நான்
அவர்களில் ஒருவனாக
அழிக்கப்பட்டு போராடுகிறேன்

இன்னும் எனக்கு
வென்று விடுவேன்
என்ற
எண்ணம்  இருக்கிறது
என் மண்ணில்
எல்லோரும்
எரிக்கப்பட்டால் !


Tags: Beggar, poor life, tamil, poem, kavithai

Saturday, January 29, 2011

தீவிரவாதம்


கத்தியின் இரத்தத்தில்
சோகத்தின் வாடை
புத்தியின் ஓரத்தில்
பிடித்தது பீடை

கண்ணீர் துளிகளில்
காரிய சித்தி
கதறலின் நடுவில்
காரண புத்தி

பிறப்புக்கு  மட்டுமே
இறப்பு சொந்தம்
உடலுக்கு மட்டுமே
உயிர் உடைமை

மனமும் குணமும்
மனிதனின் பரிணாமம்
விருப்பும் வெறுப்பும்
வாழ்க்கையின் வெகுமானம் 

ஆசை
ஒரு ஆயுதகளம்
பேராசை
ஒரு போர்க்களம்

நப்பாசை
ஒரு நயவஞ்சகன்
நிராசை
ஒரு துர்போதனை

வார்த்தை எனும்
கூர்வாள்
வீசும் முன்
நிதானிக்க வேண்டும்

கோபம் எனும்
கொலைகாரன்
வருகைக்கு முன்
யோசிக்க வேண்டும்

ஒவ்வொரு
ஆரம்பத்திற்கும் - நீயே
முதல் காரணம்
ஒவ்வொரு
முடிவிற்கும் - நீ தான்
முழு காரணம்

கெட்ட வார்த்தை
முடியாதவனின் மூலதனம்
அடிதடி
முட்டாளின் கெட்டகுணம்

எந்த உடலும்
மண்ணுக்கு கூட
சமமானது அல்ல
எந்த உயிரும்
மழைக்கு கூட
நிகரானது அல்ல

பூக்களை கூட
பறிக்காதே
புத்தி இருந்தால்
போர்க்களம் பற்றி
நினைக்காதே
புரிந்து கொண்டால் !


Tags: terrorism, knife, tamil, poem, kavithai, tamil kavithai 

மனித நேயம்


கண்ணீர் துளிகள்
விழும் முன்பே
கலக்கத்தை
துடைத்து விடு

கலக்கம் வந்து
சேரும் முன்பே
கலவரத்தை
நிறுத்தி விடு

உன் சுதந்திரம்
உறவினர்களின்
புன்னகைக்கு தான்

இந்த உலகமே
உனக்கு
உறவினர்கள் தான்

உன்னால்
முடியும் என்றால்
வயோதிகரின் கைத்தடிக்கு
ஒரு நாள்
விடுமுறை கொடுத்துப்பார்

உனக்கு
மீதம் உள்ளதென்றால்
ஊனமுற்றவனின் வலிக்கு
ஒருமுறை
உதவி செய்துப்பார்

குழந்தைகளுக்கு
முகவரி தேடாதே
முடியும் என்றால்
உன் வீட்டின்
விலாசத்தை கொடு

ஏழைகளுக்கு
இலவசம் கொடுக்காதே
இயலும் என்றால்
உன் வேலையில்
ஒன்றை பகிர்ந்துகொடு

பிறப்பும் இறப்பும்
பெற்றவளுக்கும்
பிள்ளைக்கும்
பொதுவானது தான்

பிணியும் மூப்பும்
மாட்டிற்கும்
மனிதனுக்கும்
சமமானது தான்

சுயநலம் மட்டுமே
உன்னுடையது
தன்னலம் கொண்ட
நீ கூட
மண்ணுக்கே சொந்தம் !


Tags: Human being, life with others, tamil, kavithai, kavi, poem

Friday, January 28, 2011

எந்தையே - 4

உன்
பூர்வீக கிராமத்தில்
புழுதி மண்ணில்
விழுந்து
புரண்டு கொண்டிருந்தவனை

இறுக
பற்றி எடுத்து
தூசு தட்டி
தோள் மீது ஏற்றி
பள்ளிக்கு அனுப்பினாய்

சிறு பிள்ளை
தனமாய்
தெருவில் சுற்றிய
என்னை

முறைத்துப் பார்த்து
கண்டித்திருக்கிறாய்
கேட்காத போது 
தண்டித்திருக்கிறாய்

என்
சின்ன பாதங்கள்
ஏறி ஆடியது
உன் முதுகில்
மட்டும் தான்

என்
பிஞ்சு கரங்கள்
இறுக பிடித்தது
உன் இடுப்பை
மட்டும் தான்

நீருக்குள் முழ்கி
தத்தளித்த என்னை
நீந்தி பிடித்து
கரை சேர்த்தது
நீ தான்

கவலைகள் உன்னை
அலைகழித்த போதும்
கவலைகள் இன்றி
என்னை வளர்த்தது
நீ தான்

சொந்தங்களை விட
சொத்துக்களை விட
என்னை தான்
எண்ணினாய்
மலை போல்

கடன்களை பெற்று
நிலங்களை விற்று
எனக்கு தான்
செய்தாய்
கடல் அளவு

உன்
தங்கங்களை
எனக்களித்து விட்டு
என்
எச்சிலை
உண்டவன் நீ

உன்
காலங்களை
எனக்கழித்து விட்டு
என்
கால்களை
அமுகியவன் நீ

ஒரு
இளைஞனாக
எழுந்து நின்றேன்
உன்னை
கிழவனாக
மாற்றி விட்டு

ஒரு
மனிதனாக
மாறி நிற்கிறேன்
உன்னை
மண்ணுக்குள்
அனுப்பி விட்டு !


Tags: father in my child,life with my father,tamil,kavi,kavithai,poem

காவியத் தலைவன் - 2 ( பணம் )


பணம்
காதலை கூட
விலை பேசுவது
அதன் குணம்

கரன்சி
காகிதம் கூட
கடவுள் ஆவது
அதன் வரம்

அவளை விட
என்னை
அதிகமாக இம்சிக்கும்
காந்தி தாத்தா

அவள்
நினைவுகளை விட
என்னை
மோசமாக தாக்கும்
நோட்டின் இலக்கங்கள்

ஒற்றை
மனிதன் ஊதியத்தை
வெற்றுக் காகிதம்
தருகிறது வட்டியாய்

பெற்ற
தாயின் பாசத்தை
கத்தை நோட்டு
பகிர்கிறது ஊதியமாய்

அவள்
கனவின் வாசலுக்குள்
அத்து மீறி
நுழைகிறது
தந்தையின் அதட்டலாய்

என்
இதய கூட்டுக்குள்
அவள் எதிரே
அமர்கிறது
தேடுகின்ற வேலையாய்

வலிகள்
பரிமாறப் படுவதில்லை
வாழ்க்கை
இளைப்பாற விடுவதில்லை

அவள்
வரவிற்காக காத்திருந்தேன்
என்
வேலைக்கான விண்ணப்பத்துடன் !


Tags: leader in love,money,tamil,kavi,kavithai,poem

Thursday, January 27, 2011

காவியத் தலைவி - 2 ( ரகசியம் )

 
என்
தோட்டத்து முல்லை
தொட்டால் சிணுங்குகிறது
என்னை போல

என்
வாட்டதைக்  கண்டு
வண்டுகள் தவிக்கின்றன
பூவாய் எண்ணி

ஈரமான
கூந்தலில் சிதறும்
ஈரம் கேட்கிறது
சிரிக்கச் சொல்லி

நீளமான
விரல்கள் தீட்டும்
கோலம் சிரிக்கிறது 
பேசு என்று

காரமான
மனசு எண்ணும்
கானம் பாட
குயில்கள் எழுந்தன

பாரமான
இதயம் சொல்லும்
பல்லவி கேட்க
பகலவன் வந்தான் 

குதித்து குதித்து
குழம்பு கூட
கொதிக்கிறது
உண்மை அறிய

பசித்து பசித்து
வயிறு கூட
எரிகிறது
உள்ளம் உணர

கடிகார
முற்கள் மட்டும்
கம்பிரமாய் அதட்டியது
நேரம் ஆகிடுச்சு

காலில்
மாட்டும் போது
ரகசியம் கேட்க
அவசரமாய் கடித்த
செருப்பை
மிதித்து விட்டு
புறப்பட்டேன்

வேலைக்கு போக
சரியான
வேளைக்கு போக !


Tags: secreat,love,morning,tamil,kavi,kavithai,poem

காவியத் தலைவன் - 1 ( சொல்லி விடு )



உன்
பாதைகள் தோறும்
வலை விரித்து
நிற்கவில்லை
சிலையாகத் தான் 
நின்றேன்

உன்
ஒரு நொடிப் பார்வை
என்னை 
உயிர் பெறச்
செய்யாதா என்று

என்
கைகளில்
பொன்னை தாங்கி
நிற்கவில்லை
பூவை ஏந்தி
நின்றேன்

என்
மனதை நீ
புரிந்து கொள்ள
மாட்டாயா என்று

எல்லா இரவுகளும்
பெளவுர்ணமியை பார்ப்பதில்லை
பிறை நிலவிலும்
அவை
பிரகாசம் அடைகின்றன

வெறும்
வார்த்தைகள் அல்ல
உன் பேச்சு
என்
வாழ்விற்கு அது
உயிர் முச்சு

யார் சொல்லியும்
கேட்காத
நான் மட்டும் அல்ல
நான் சொல்லியும்
கேட்காத
நானும் உண்டு

நீ மட்டும் 
எதுவும் சொல்ல
விரும்பவில்லை
இருந்தும் நான்
சுற்றி வருகிறேன்
ஒரு
வார்த்தையாவது
சொல் என்று

சொல்லி விடு
உன் சோகங்களை
சுமக்கிறேன்
என் சுமைகளுடன்
சேர்த்து

சொல்லி விடு
என் சுகங்களை
பகிர்கிறேன்
உன் சொந்தங்களுடன்
சேர்ந்து


Tags: lover,tell me,boy,tamil,kavi,kavithai,poem

காவியத் தலைவி -1 ( விட்டு விடு )



என்
விழிகளில்
மோட்சம் என்றாய்

என்
வழிகளில்
தீட்சை என்றாய்

என் சிரிப்பை
சிதறும்
முத்து என்றாய்

என் முறைப்பை
முழு
சம்மதம் என்றாய்

நான்
பேச பேச
கேட்பேன் என்றாய்

நான்
கேட்க கேட்க
பேசுவேன் என்றாய்

எப்படி தெரிகிறேன்
நான் உனக்கு
அப்படியே தெரிவதில்லை
நான் எனக்கு

முக்காடில் மறைகிறேன்
தினமும் நான்
முழுவதுமாய் மறுக்கிறேன்
என்னை உனக்கு

என்ன சொல்ல
என் வாழ்க்கையே
ஒரு
சாபக் கேடாய் !

நானும் கூட
ஒரு
கானல் நிராய்
உனக்கு
மட்டும் அல்ல
எனக்கும் தான் !


Tags: lady lover,part one,leave me,tamil,kavi,kavithai,poem

Wednesday, January 26, 2011

எந்தையே - 3


நீ
காட்டியது தான்
என்
கடவுள் !

நீ
ஏற்றியது தான்
அதன்
தீபம் !

நீ
சார்ந்தது தான்
என்
சமயம் !

நீ
செய்தது தான்
அதன்
சடங்கு !

நீ
சூட்டியது தான்
என்
சாதி !

நீ
சொன்னது தான்
அதன்
நீதி !

நீ
வாழ்ந்தது தான்
என்
சமூகம் !

நீ
வளர்த்தது தான்
அதன்
சட்டம் !

உன்
மகன் தான்
நான் !
உன்
முகம் தான்
எனக்கு !

இருந்தும்
யாருமே இல்லையே
உன்
இறுதி நாட்களில்

நான் கூட
இறங்க வில்லையே
உன்
தோளின் மீதிருந்து... !

Tags: father teach,son feel,tamil,kavi,kavithai,poem

எந்தையே - 2


உயிர்
கொடுத்தாய்
உடல்
கொடுத்தாய் !

உலகம் என்னும்
பூமிப் பந்தில்
என்னை
உலவ விட்டாய் !

உணவு
கொடுத்தாய்
உடை
கொடுத்தாய் !

உடைமை என்னும்
உன் சொத்தில்
எனக்கு
உரிமை தந்தாய் !

சொந்தம் தந்தாய்
பந்தம் தந்தாய் !
சுற்றும் உலகில்
எனக்கொரு
சுற்றம் தந்தாய் !

துன்ப பட்டாய்
துயரப் பட்டாய் !
உன் இன்பத்தையே
எனக்காக
இழந்து விட்டாய் !

மூப்பு கண்டாய்
பிணி கண்டாய் !
உன் முடிவிலும்
எனக்காக
கண்ணீர் விட்டாய் !

அனாதை என்ற
வார்த்தை
அக்கினியாய் சுடுகிறது !
இப்போது தான்
அதன்
அர்த்தம் புரிந்ததால் !


Tags: dad,son,social,tamil,kavi,kavithai,poem

எந்தையே


எந்தையே
எந்தன் தந்தையே ! – என்
சிந்தை எல்லாம்
வாழும்
தெய்வமே !

உன் பெயர்
சொல்ல சொல்ல
தெய்வ
திரு மந்திரம்
ஆகும் !

உன் குரல்
மெல்ல மெல்ல
நான்
போற்றுகின்ற வேதம்
சொல்லும் !

உன் உருவம்
தந்தை என்றால்
உன் அருவம்
தெய்வம் அன்றோ !

உன் கனவு
இலட்சியம் என்றால்
உன் நினைவு
நிச்சயம் அன்றோ !

தந்தைக்கு
மரணமில்லை
தமையன்
இருக்கும் வரை !

உனக்கு
மறைவு இல்லை
நான்
உள்ள வரை !

நீ கடவுள்
நீயே கடவுள்
நீ தான் கடவுள்
எனக்கு !

Tags: father,god,death,tamil,kavi,kavithai,poem

குடியரசு



என்
பட்டினி சொந்தம்
பணத்துக்கு போடும்
ஓட்டுக்கு பெயர்
குடி உரிமை

அரசின்
ஓய்வு சட்டம்
அதிகாரம் செய்யாத
அரசியலுக்கு பெயர்
குடி ஆட்சி

படித்து விட்டு
வேலைக்கு
வெளிநாட்டின் சட்டத்தை
எதிர்நோக்கும்
இந்திய குடிமகன்

குடித்து விட்டு
அரக்கு
கூலி கொடுக்கும்
குடிகார
பொது மக்கள்

மன்னன்
ஆண்டது அரசாட்சி
மற்றவன்
ஆண்டது பரங்கியரட்சி

உற்றவன்
என்று சொல்லி
பணம்
உள்ளவன் எல்லாம்
ஆள்வது தான்
மக்கள் ஆட்சி

என்று தணியும்
எங்கள் 
ஏழையின் தாகம்
என்று மடியும்
எங்கள் 
இளைஞனின் மோகம் !


Tags: republic day,india,celebration,tamil,kavi,kavithai,poem

Tuesday, January 25, 2011

துளிகள் - 2

விளக்கின்
ஒளி பட்டு
சிணுங்கும்...
உன்
கால் கொலுசின்
அழகை விட 
நிலவின்
முகம் தொட்டு
சிரிக்கும்
சூரிய கிரகணம்
சுவாரசியம் அற்றது
தான் !


துளிகள்




Tags: picture,love,nature,tamil,kavi,kavithai,poem

Monday, January 24, 2011

புலம்பல்

 பருவச் சிறையில்
அடைபட்டு கிடந்தேன்
என்னை
இதய கூண்டுக்கு
இடம் மாற்றினாய்

உருவச் செழிப்பில்
உலவி வந்தேன்
உன்
உள்ள அழகில்
மயக்கி விட்டாய்

உறவுத் திமிரில்
சுற்றித் திரிந்தேன்
என்னை
தாலிக் கயிற்றில்
தனிமை படுத்தினாய்

இரவும் பகலும்
ஆட்சி செய்தாய்
உன்
இல்லத்து அரசியாக
மாட்சிமை தந்தாய்

கற்பின் பெருமையை
காத்து நின்றேன்
என்னை
கருவுறச் செய்து
கெளரவம் அளித்தாய்

குழந்தை பெற்று
தாய் ஆனேன்
உன்
குலம் காக்க
பாடு பட்டாய்

பிள்ளை சிரிப்பில்
ஆனந்தம் கண்டேன்
என்
அன்பு களிப்பில்
பேரின்பம் கண்டாய்

மக்களை வளர்த்து
மக்கள் ஆக்கினேன்
உன்
பேரக் குழந்தைகளுக்கு
பாட்டி ஆக்கினாய்

வாழ்ந்த களைப்பில்
வக்கனையாய் பேசினேன்
என்னை
போற்றி புகழ்ந்து
புவி நீங்கினாய்

எல்லாம்
விட்டுச் சென்றாய்
என் தெய்வமே
எனை விட்டு
நீ மட்டும்
எங்கு சென்றாய் !


Tags: girl,woman,husband,tamil,kavi,kavithai,poem

தாய்


இறுமாப்பு
அடைந்து கொள்
நான்
இத்தனை
சிறுமைப்பட்டு கிடந்தது
உன்னிடம் மட்டும் தான் !

பெருமிதம்
கொண்டு மகிழ்கிறேன்
என்னை
இவ்வளவு
பெரியவனாகியவள்
நீ தான் என்று !

வெட்கி
தலை குனியட்டும் 
உன்
முதுமைக்கு
ஒரு தீர்வும்
காணாத உலகம்

கொலைப் பழி
ஏற்கட்டும்
உன்னை
என்
கண் முன்னே
கொன்று சென்ற இயற்கை

என்
கண்ணீரை
துடைக்க வரும்
வெறுமையை கண்டு
திகைக்கிறேன்
உன் குரல்
கேட்பது போன்று !

இளமையில் வறுமை


வறுமைக்கு பிறந்தவன்
வாழத் துடிக்கிறான்
வாடியப் பின்னும்
ஓடி வருகிறான்

ஒரு வேளை
உணவு தான்
அவனது நோக்கம்
ஒரு நாளைய
உயிர் தான்
அவனது ஏக்கம்

தினம் தினம்
செத்து பிழைக்கிறான்
தெரிந்திருந்தும்
சாக மறுக்கிறான்

என்றாவது ஒருநாள்
வாழ்வோம் என்றல்ல
எப்படி சாவது
என்ற கவலையில்

எலும்புகள் சொல்லும்
ஏழ்மையின் கொடுமை
யாருக்கு தெரியும்
ஏழையின் நிலைமை

இந்த சுவர்கள்
செப்பனிடப்பட வேண்டும்
ஒரு நல்ல
சித்திரம் எழுத

இந்த கரங்கள்
ஏற்கப்பட வேண்டும்
ஒரு வலிமையான
உறவுகள் அமைய !


Tags: poor,poor peoples,at war,tamil,kavi,kavithai,poem

காதல்

இக்கரை 

விழிகளால் பார்த்து 
விழிகளால் பேசி 
விழிகளால் பழகும் 
நம் உறவை 
எப்போது அன்பே 
மொழிகளுக்கு 
மொழி மாற்றம் 
செய்யப் போகிறாய் 
உதடுகள் 
மட்டும் அல்ல 
உள்ளமும் கேட்கிறது 
என்னை
ஊமையாக்கிவிடாதே என்று !


அக்கரை

அன்பே 
நான் உன்னை 
மட்டும் 
காதலிக்கவில்லை 
என் 
இலட்சியத்தையும் 
காதலிக்கிறேன் !


ஆதலால் 
நீ இல்லை என்றதும் 
நான் 
இறந்து போக மாட்டேன் 
உன்னை 
மறந்து போக 
முயற்சிப்பேன் 

இன்று 
அணுவுடன் அணுவாய்
கலந்திருக்கும் நீ !
ஒரு 
ஆட்கொல்லி நோய்
போல் தாக்கலாம் 


ஆனால்
நாளை 
உன் நினைவுகள் 
என்
இறந்து போன 
செல்களுடன் கலந்து 

வெட்டப்படும் நகமாய் 
விழுந்து போகும் 
கொட்டிவிடும் முடியாய்
உதிர்ந்து போகும் 


இது 
ஒரு 
நோயாளியின்
பிதற்றல் அல்ல !
ஒரு 
நோன்பின் 
பிராத்தனை !




Tags: love,affection,aim,tamil,kavi,kavithai,poem

Saturday, January 22, 2011

கனவு

உறக்கத்தில்
ஒரு நினைவு

உறக்கம்
கலைந்தது போல்
ஒரு கனவு

பார்த்த முகம்
பார்க்காத முகம்
தினமும்
பார்க்கும் முகம்

நடந்த செயல்
நடக்காத செயல்
அன்றாடம்
நடக்கும் செயல்

ஒவ் ஒன்றாக
ஒன்றன் பின்
ஒன்றாக
ஒன்றுடன் ஒன்று
கலந்து

ஒரே சீரான
ஒன்றுக்கு ஒன்று
முரண்பாடான
ஒன்றுமே
புரியாமல்

சிந்தனை எழுதும்
சீர்திருத்த கணிதம்
சிந்திப்பவன் மனதை
சமப்படுத்தும் முயற்சி

உடல் ஒரு
சக்தி எந்திரம்
உணர்வுகள் தரும்
முக்தி மந்திரம்

மண்ணுக்கும்
மனிதனுக்கும் உறவுண்டு
மண்ணோடு
மண்ணாகும் உரிமையுண்டு

ஒவ் ஒரு
செயலுக்கும்
உபச் செயல் உண்டு

ஒவ் ஒரு
நினைவுக்கும்
உறவுகள் உண்டு

அறிவின் தெரிவில்
அறிவது பாதி
அறியாமல் இருப்பது
அனுபவ நியதி

ஒவ் ஒரு
புள்ளிக்கும்
ஊசலாட்டம் உண்டு
உன்னிப்பாய்
பார்த்தாலும்
உணரமுடிவதில்லை

கண்கள் அறியா
ஊசலின் ஆட்டம்
கனவில் தெரிவதே
பலிக்கும் உண்மை

உன்னை அறியா
உன்னை
உலகம் பார்க்கிறது
உன்னை அறியும்
உன்னை - உன்
உள்ளம் பார்க்கிறது

உள்ளம் பேசும்
கனவு
உள்ளதை சொல்லும்
உரக்க கேட்கும்
நினைவு
உறக்கத்தில் நடக்கும்





Tags: dreams,dreams walk,tamil,kavi,kavithai,poem

Friday, January 21, 2011

மரணப் படுக்கை

காரணமில்லாத
கண்ணீர் படுக்கை
பல
காரியம் செய்த
காரணப் படுக்கை

உண்மைகள்
கோடி
உவமைகள் சொல்லும்

உள்ளத்தில்
ஆயிரம்
உருவகம் எழுதும்

பொய் முகம்
கழுவும்
மெய்யான வருத்தம்

பூமியை
தழுவும்
பூவுடல் மோட்சம்


காலடி
தடத்தின்
ஏளனப் பார்வை

கைத் தொடும்
தூரத்தின்
கரவொலி சிரிப்பு

விழி கூட
துரோகம் செய்தது
மொழி கூட
மவுனம் சாதித்தது

செவிகள்
செவிடாகி போனது
சிந்தனை
செயலிழந்து போனது

வெறும்
சதை பிண்டமாய்
ஒரு
வாழ்க்கை

பெரும்
சாப கேடாய்
ஒரு
வாழ் நாள்

மவுனம்
அதிகமாக பேசுகிறது
மனம்
அமைதியின்றி தவிக்கிறது

சாதனைகள்
கை கட்டி
நிற்கின்றன
சோதனைகள்
வாய் பொத்தி
செல்கின்றன

காலம்
பார்த்து பார்த்து
நகர்கின்றது
காலன்
நகர்ந்து நகர்ந்து
வருகின்றான்

பாவங்கள்
சேர்ந்து கொண்டன
பாவமாய்
கடமை நின்றது

உரிமையாய்
மரணம் வந்தது
உறவிழந்து - ஒரு
உலகம் நின்றது

இது
அழியும் உடலின்
ஆயுள் படுக்கை
அழியா உயிரின்
மரணப் படுக்கை !


Tags: death,bed,kavi,kavithai,poem,tamil

இன்றைய நாள்

ரோஜா
மொட்டொன்று
முள் செடியில்
பூத்திருக்கும்

பார்ப்பதற்கு வந்த
பனித்துளிகள்
முத்தமிட்டு
மெய் மறக்கும்

வெட்கத்தில்
சிவந்த இதழ்கள்
பூவாய்
மலர்ந்திருக்கும்

விடியலில்
தோன்றும் வெயில்
விரல்களால்
வருடிச் செல்லும்

இரவுக்குள்
இறக்கப்போவது
நிச்சயம்

இருந்தும்
இனம் புரியாத
ஒரு அச்சம்

இப்படியே
இருந்து
உதிர்ந்து போகலாமா

அப்படியே
விழுந்து
பதியப் போடலாமா

மாலையுடன்
சேர்ந்து
மணந்து சாகலாமா

மங்கையுடன்
கூடி
மணத்து வாடலாமா

விதைகளாகும்
மலர்களாய்
பதப்படுத்த படலாமா

விருந்தாகும்
பூக்களாய்
காட்சியாகி விடலாமா

அதிர்ச்சி
மரணமாய் - ஒரு
அதிகார
கை பறித்து
கசக்கி
எறியப்படுவதும்
கண்ணீர் கலந்த
உண்மை !


Tags: day,roja,tamil,kavi,kavithai,poem

தினப் போராட்டம்

மவுனமாய் வெடிக்கிறேன்
மனதுக்குள் துடிக்கிறேன்

என்னை நானே
எழுதிப்பார்க்கிறேன்
எனக்குள் நானே
அழித்துப்பார்கிறேன்

புன்னகை மருந்தை
பூசிப் பார்க்கிறேன்
பொய்யாய் ஒருமுறை
சிரித்துப் பார்கிறேன்

என்ன என்ன
என்று
கேட்டுப் பார்கிறேன்
எதுவும் இல்லை
என்று
சொல்லிப் பார்கிறேன்

இதயம் வலிப்பதாய்
எண்ணுகிறேன்
இரத்தம் கசிவதாய்
உணருகிறேன்

நான் அறியாமல்
நடந்து செல்கிறேன்
நாள் அறியாமல்
கடந்து செல்கிறேன்

விழியில் கசியும்
கண்ணீரை - என்
விரல்கள் இன்றி
துடைக்கிறேன்

வெயிலில் தெரியும்
தண்ணிரில் - என்
தாகம் தீர்க்க
நினைக்கிறேன்

இன்னமும் மாறாத
மனப் போராட்டம்
என்னையே
மாற்றிப்போடும்
தினப் போராட்டம் !



Tags: daily,war,tamil,kavi,kavithai,poem

மனப் போராட்டம்

திசைக்கு நூறு
தலைகள்
விழுந்து கிடந்தன !

தலைக்கு நூறு
பருந்துகள்
உண்டு மகிழ்ந்தன !

உடல் கூருகள்
உடல்கள்
உருத் தெரியாமல்
சிதறி கிடந்தன !

கை வேறாய்
கால் வேறாய்
கணக்கின்றி
கலந்து கிடந்தன !

என்
மனதில் தான்
நடந்து கொண்டிருந்தது
இத்தனை
மூர்க்கமான போர் !

எனக்குள்
நானே
துண்டாடப்பட்டிருந்தேன்
அத்தனை
பாவப்பட்ட உயிர்களாய் !

Tags: mind,tamil,kavi,kavithai,poem