Monday, January 24, 2011

காதல்

இக்கரை 

விழிகளால் பார்த்து 
விழிகளால் பேசி 
விழிகளால் பழகும் 
நம் உறவை 
எப்போது அன்பே 
மொழிகளுக்கு 
மொழி மாற்றம் 
செய்யப் போகிறாய் 
உதடுகள் 
மட்டும் அல்ல 
உள்ளமும் கேட்கிறது 
என்னை
ஊமையாக்கிவிடாதே என்று !


அக்கரை

அன்பே 
நான் உன்னை 
மட்டும் 
காதலிக்கவில்லை 
என் 
இலட்சியத்தையும் 
காதலிக்கிறேன் !


ஆதலால் 
நீ இல்லை என்றதும் 
நான் 
இறந்து போக மாட்டேன் 
உன்னை 
மறந்து போக 
முயற்சிப்பேன் 

இன்று 
அணுவுடன் அணுவாய்
கலந்திருக்கும் நீ !
ஒரு 
ஆட்கொல்லி நோய்
போல் தாக்கலாம் 


ஆனால்
நாளை 
உன் நினைவுகள் 
என்
இறந்து போன 
செல்களுடன் கலந்து 

வெட்டப்படும் நகமாய் 
விழுந்து போகும் 
கொட்டிவிடும் முடியாய்
உதிர்ந்து போகும் 


இது 
ஒரு 
நோயாளியின்
பிதற்றல் அல்ல !
ஒரு 
நோன்பின் 
பிராத்தனை !




Tags: love,affection,aim,tamil,kavi,kavithai,poem

2 comments: