Wednesday, January 26, 2011

எந்தையே - 3


நீ
காட்டியது தான்
என்
கடவுள் !

நீ
ஏற்றியது தான்
அதன்
தீபம் !

நீ
சார்ந்தது தான்
என்
சமயம் !

நீ
செய்தது தான்
அதன்
சடங்கு !

நீ
சூட்டியது தான்
என்
சாதி !

நீ
சொன்னது தான்
அதன்
நீதி !

நீ
வாழ்ந்தது தான்
என்
சமூகம் !

நீ
வளர்த்தது தான்
அதன்
சட்டம் !

உன்
மகன் தான்
நான் !
உன்
முகம் தான்
எனக்கு !

இருந்தும்
யாருமே இல்லையே
உன்
இறுதி நாட்களில்

நான் கூட
இறங்க வில்லையே
உன்
தோளின் மீதிருந்து... !

Tags: father teach,son feel,tamil,kavi,kavithai,poem

1 comment: