Wednesday, January 26, 2011

எந்தையே - 2


உயிர்
கொடுத்தாய்
உடல்
கொடுத்தாய் !

உலகம் என்னும்
பூமிப் பந்தில்
என்னை
உலவ விட்டாய் !

உணவு
கொடுத்தாய்
உடை
கொடுத்தாய் !

உடைமை என்னும்
உன் சொத்தில்
எனக்கு
உரிமை தந்தாய் !

சொந்தம் தந்தாய்
பந்தம் தந்தாய் !
சுற்றும் உலகில்
எனக்கொரு
சுற்றம் தந்தாய் !

துன்ப பட்டாய்
துயரப் பட்டாய் !
உன் இன்பத்தையே
எனக்காக
இழந்து விட்டாய் !

மூப்பு கண்டாய்
பிணி கண்டாய் !
உன் முடிவிலும்
எனக்காக
கண்ணீர் விட்டாய் !

அனாதை என்ற
வார்த்தை
அக்கினியாய் சுடுகிறது !
இப்போது தான்
அதன்
அர்த்தம் புரிந்ததால் !


Tags: dad,son,social,tamil,kavi,kavithai,poem

1 comment: