உன்னை
நான் பிரித்தால்
வலியில்லை
என்னை
நீ பிரிந்தால்
வலிக்கிறது
கொஞ்சம் கூட
இரக்கம் அற்ற
நெஞ்சம் இது
கொஞ்சம் நீ
விலகி சென்றால்
குமுறுகிறது
நான் என்றால்
தவறும்
சரி தான்
நீ என்றால்
சரியும்
தவறு தான்
உன்னை விட
என்னை
நான் அதிகமாக
நேசிக்கின்றேனா
நேசிக்கின்றேனா
உன்
பிரிவை விட
என் சுயமரியாதை
பெரிதாகி போனதா
நாம் வாழும்
உலகில்
நான் என்பதும்
பாவம்
நீ என்பதும்
பாவம்
உயிர் வாழும்
உடலின்
பசி கூட
கட்டாயம்
காமம் கூட
கட்டளை
எங்கிருந்து
வந்தது ஆசை
என் மீது
நான் கொள்ளும்
பேராசை
எப்போது
தோன்றியது தன்னலம்
என்னையே நான்
போற்றிக் கொள்ளும்
சுயநலம்
என்னை
உனக்கு பிடிக்கவில்லை
என்ற வார்த்தையே
என்னை
எனக்கு பிடிக்க
வைத்தது
நான்
தவறு செய்பவன்
என்ற குற்றமே
நீ
தவறு செய்பவன்
என்று சாட்சி
சொன்னது
உன்
அலட்சியப் பார்வை
என்னை
அழகு செய்தது
உன்
ஏளனப் பேச்சு
எனக்கு
அலங்காரம் சூட்டியது
கடுமையான திட்டுக்கள்
என்னை
கேடையம் அணிந்திட
பணிந்தது
கொடுமையான அடிகள்
எனக்கு
கொலைவாள் எடுக்க
தூண்டியது
என்
மாறிப் போன
முகம் கண்டு
மலைக்காதே
அது
நீ பூசிய
கரியில்
கருத்துப் போனது
நான்
வெறுக்க
கற்றுக் கொண்டேன்
நீ
ஆரம்பிக்கும் முன்
இன்னொருவனை
நொறுக்க
பழகிக் கொண்டேன்
அவன்
பரிதவித்த பின்னும்
என்
இரத்தத்தில் ஊறிப்போனது
என்
வம்சத்தில் கலந்துபோனது
எனக்கே
நான் என்பது
எமனாகி போனது
என் பிள்ளைக்கு
தான் என்பது
தவமாகி போனதால் !
எனக்கே
ReplyDeleteநான் என்பது
எமனாகி போனது
என் பிள்ளைக்கு
தான் என்பது
தவமாகி போனதால் !
super da nanba...