Saturday, February 12, 2011

களைகள்

கொலை தொழில்
செய்வதும்
நரமாமிசம் உண்பதும்
ஒன்றுதான்

ஒருவனை கொன்று
வாழ்வதை விட
உன்னையே நீ
உண்டு வாழலாம்

உண்மையில்
உன்னை நீ
தண்டித்துக்
கொள்ள கூட
உரிமையில்லாதவன்

தானே
முளைத்து வரும்
சுயம்பு அல்ல
நீ

வெறும்
காற்றில் வளரும்
பொருள் இல்லை
உடல்

நீ
பிடுங்கி
உண்ண கூட
ஒருவன்
விட்டு கொடுத்திருக்க
வேண்டும்

நீ
திருடி
செல்வதைக் கூட 
ஒருவன்
மறந்து விட்டுருக்க
வேண்டும்

நாம்
எல்லோருமே
ஐம்பூதங்களின்
கலவை தான்

நம்
எல்லோருக்குமே
பிணியும் மூப்பும்
ஒன்று தான்

ஒருவன்
கத்தியை எடுப்பதும்
புத்தியாய் நடப்பதும்
சக்தியின்
வடிவம் தான்

உன் கத்தி
ஒருவனை கொன்று
உன்னை காக்கும்
ஒருவனின் புத்தி
அவனையே கொன்று
உலகத்தை காக்கும்

ஊரையே கொளுத்தி
விட்டு
நீ மட்டும்
சுடுகாட்டில்
வாழ முடியாது

அருகில் இருப்பவனை
அவ்வபோது
சாகடித்து விட்டு
தொலைவில் இருப்பவனின் 
துணை தேடுபவன்
நீ

சிறு சிறு
வாழ்க்கை நெருக்கடிகள்
தான்
உன் கொலைகள்

பெரியதொரு
சமுதாய நெருடல்கள்
தான்
இந்த களைகள் !

No comments:

Post a Comment