கொலை தொழில்
செய்வதும்
நரமாமிசம் உண்பதும்
ஒன்றுதான்
ஒருவனை கொன்று
வாழ்வதை விட
உன்னையே நீ
உண்டு வாழலாம்
உண்மையில்
உன்னை நீ
தண்டித்துக்
கொள்ள கூட
உரிமையில்லாதவன்
தானே
முளைத்து வரும்
சுயம்பு அல்ல
நீ
வெறும்
காற்றில் வளரும்
பொருள் இல்லை
உடல்
நீ
பிடுங்கி
உண்ண கூட
ஒருவன்
விட்டு கொடுத்திருக்க
வேண்டும்
நீ
திருடி
செல்வதைக் கூட
ஒருவன்
மறந்து விட்டுருக்க
வேண்டும்
நாம்
எல்லோருமே
ஐம்பூதங்களின்
கலவை தான்
நம்
எல்லோருக்குமே
பிணியும் மூப்பும்
ஒன்று தான்
ஒருவன்
கத்தியை எடுப்பதும்
புத்தியாய் நடப்பதும்
சக்தியின்
வடிவம் தான்
உன் கத்தி
ஒருவனை கொன்று
உன்னை காக்கும்
ஒருவனின் புத்தி
அவனையே கொன்று
உலகத்தை காக்கும்
ஊரையே கொளுத்தி
விட்டு
நீ மட்டும்
சுடுகாட்டில்
வாழ முடியாது
அருகில் இருப்பவனை
அவ்வபோது
சாகடித்து விட்டு
தொலைவில் இருப்பவனின்
துணை தேடுபவன்
நீ
சிறு சிறு
வாழ்க்கை நெருக்கடிகள்
தான்
உன் கொலைகள்
பெரியதொரு
சமுதாய நெருடல்கள்
தான்
இந்த களைகள் !
செய்வதும்
நரமாமிசம் உண்பதும்
ஒன்றுதான்
ஒருவனை கொன்று
வாழ்வதை விட
உன்னையே நீ
உண்டு வாழலாம்
உண்மையில்
உன்னை நீ
தண்டித்துக்
கொள்ள கூட
உரிமையில்லாதவன்
தானே
முளைத்து வரும்
சுயம்பு அல்ல
நீ
வெறும்
காற்றில் வளரும்
பொருள் இல்லை
உடல்
நீ
பிடுங்கி
உண்ண கூட
ஒருவன்
விட்டு கொடுத்திருக்க
வேண்டும்
நீ
திருடி
செல்வதைக் கூட
ஒருவன்
மறந்து விட்டுருக்க
வேண்டும்
நாம்
எல்லோருமே
ஐம்பூதங்களின்
கலவை தான்
நம்
எல்லோருக்குமே
பிணியும் மூப்பும்
ஒன்று தான்
ஒருவன்
கத்தியை எடுப்பதும்
புத்தியாய் நடப்பதும்
சக்தியின்
வடிவம் தான்
உன் கத்தி
ஒருவனை கொன்று
உன்னை காக்கும்
ஒருவனின் புத்தி
அவனையே கொன்று
உலகத்தை காக்கும்
ஊரையே கொளுத்தி
விட்டு
நீ மட்டும்
சுடுகாட்டில்
வாழ முடியாது
அருகில் இருப்பவனை
அவ்வபோது
சாகடித்து விட்டு
தொலைவில் இருப்பவனின்
துணை தேடுபவன்
நீ
சிறு சிறு
வாழ்க்கை நெருக்கடிகள்
தான்
உன் கொலைகள்
பெரியதொரு
சமுதாய நெருடல்கள்
தான்
இந்த களைகள் !
No comments:
Post a Comment