Thursday, February 17, 2011

இயற்கையை விட்டு ஓடாதே

எது தேவை
வாழ்க்கைக்கு
யார் தேவை
வாழ்வதற்கு

கோடிக் கோடியாய்
கொட்டி எழுப்பிய
தொழிலகத்திலும்
உழைப்பாளியாய்
முதலில் நுழைபவன்
படிக்காத பாமரனே

ஆயிரம் சீருடை
தரித்தாலும்
அவன் நாகரிகம்
அறியாதவன்

நூறு நுட்பங்கள்
கற்பித்தாலும்
அவன் அடிப்படையில்
படிப்பறிவற்றவன்

எங்கு
வெற்றி பெற்றாய்
நீ
எப்போது வென்றது
உன் அதிகாரம்

கண்ணாடி
அலுவலகம் வந்ததா
கணிணியில்
வேலை பார்ப்பதா

ஏழ்மையை
விலகி சென்றதா
ஏழையை
அடிமை படுத்தியதா

இறுக முடிய
சொகுசு வாகனத்தில்
தெருவை பார்க்காத
ஒரு பயணம்

உயர எழுப்பிய
பெரிய வீட்டில்
அறையை தாண்டாத
ஒரு வாழ்க்கை

காற்று கூட
அங்கு
கட்டுபாட்டுடன் தான்
வருகிறது

நீர் கூட
அங்கு
வடிகட்டப்பட்டு தான்
வருகிறது

என்ன செய்கிறாய்
நீ
எப்படி பார்கிறாய்
இயற்கையை

காலையும் மாலையும்
கடற்கரை சாலையில்
கால் வலிக்க
நடைப்பயிற்சி செய்கிறாய்

உண்மையில்
உன் நாயுடன்
சேர்த்து
உன் உடம்பையும்
அழைத்து வருகிறாய்

மூடனே
முட்டாளை
அடிமை படுத்துகிறாய்
முடியாதவனை
ஏழையாக்குகிறாய்

இல்லாதவனை
ஏமாற்ற பார்கிறாய்
இயலாதவனை
எட்ட நிறுத்துகிறாய்

நீ
காசு கொடுத்தால்
காற்று குளிராக
வேண்டும்
பணம் செலவழித்தால்
நீர் வெப்பமாக
வேண்டும்

உன் விருப்பத்திற்கு
இயற்கை
இணங்கி வர
வேண்டும்

உயிர் கூட
நீ
சொன்னால் தான்
பிரிந்து செல்ல
வேண்டும்

உன் கழிவுகளை
சுத்தம் செய்ய
கணக்கற்ற ஏழைகளை
அடிமைகளாய் வைத்திருப்பாய்

இது தான்
வெற்றியின் தத்துவம்
என்று
எல்லோருக்கும் பாடம்
நடத்துவாய்

நிறுத்தி விடு
குப்பை மேட்டிற்கு
நடுவில்
கோபுரங்கள் கட்டுவதை

விட்டு விடு
சாக்கடைக்கு மத்தியில்
சந்தனத்தில் குளிப்பதை

எந்த
கணித சூத்திரத்தில்
சாத்தியம் - எட்டு
இலக்க எண்ணில்
இரண்டு இலக்கங்கள்
தனியே வகுபடும்
என்பது

இயற்கை
சீற்றத்திற்கு முன்
ஏழை பணக்காரன்
இருவரும் ஒன்றுதான்

வானம்
இடிப்பதை தடுத்தாலும்
பூமி
வெடித்தால் என்னாவாய்

இனியாவது
உன் அறிவாற்றலை
உனக்கும்
உன் சுற்றத்திற்கும்
சொத்தாக்குவதை நிறுத்து

அது
நிரந்தர தீர்வும்
அல்ல
நிம்மதியான தீர்வும்
அல்ல

ஆயிரம்
எலி வலைகள்
இருந்தால்
ஆலமரம் கூட
அடிசாயும்

நீ
கோடி குடிசைகள்
இருக்க
கோபுரங்கள் கட்டுகிறாய்

ஒருமுறை
திரும்பி பார்
நீ
இயற்கையை விட்டு
எத்தனை தூரம்
ஓடப் பார்கிறாய்
என்பதை !

No comments:

Post a Comment