Thursday, February 3, 2011

நகைத்து விடு

மனமே
நகைத்து விடு
கனவென்று
நினைத்து விடு

முறைத்தால்
சிரித்து விடு
இறுக்கங்கள்
தளர்த்தி விடு

ஒரு 
பூ தான்
நிம்மதி என்று
உன்
புத்திக்கு
சொல்லி விடு

ஒரு
பா தனை
கேள் என்று
உன்
சக்திக்கு
ஆணை இடு

சீறிப் பாயும்
வாகனத்தை
தூக்கி
தூர எறிந்துவிட்டு
சற்று தூரம்
நடந்துப் பார்

ஒட்டு போட்ட
கட்டிடத்தை
விட்டு
வெளியில் வந்து
மர நிழலில்
நின்று பார்

அதிகாலை
எழுவதை பார்
அந்திமாலை
விழுவதைப் பார்

நிலவு
நகர்வதை பார்
நட்சத்திரம்
ஒளிர்வதைப் பார்

காற்றின்
சத்தத்தை கேள்
நீரின்
சலனத்தை பார்

நெருப்பின்
சீற்றத்தை தணி
இருளின் 
தோற்றத்தில் எரி

அவசர முகங்கள்
அலை மோதும்
கூட்டம்
வண்டியின் உறுமல்
வாகன நெரிசல்

தரையில்
கரி பூசி
தார் சாலை

தாய் மண்ணை
மறைத்து விட்டு
மாட மாளிகை

உயர்ந்த கட்டிடத்தில்
சிறு வீடு
பெரிய அலுவலகத்தில்
ஒரு நாற்காலி

அவ்வபோது
வாடகைக்கு
சில வசதிகள்
அன்றாடம்
கட்டணத்திற்கு
பல காரியங்கள்

நடைமுறை
கொடுமைகளை
உடைப்பில் போடு
நாகரிக
அவலங்களை
கிடப்பில் போடு

ஒருமுறை
புன்னகைத்து விடு
பெரும்
கனவு தான்
வாழ்க்கை என்று !

No comments:

Post a Comment