நாளை
நான் வரும்
உலகிற்கு
நீ சென்றாயென
ஆறுதல் அடைந்தாலும்
இன்று
நான் வாழும்
உலகில்
நீ இல்லாமல்
இருப்பதால் வருந்துகிறேன்
ஆயிரம்
மரணங்கள்
எனக்கு
உணர்த்தியது
வருத்தத்தை தான்
உன்
மரணம் தான்
எனக்கு
உணர்த்தியது
வாழ்க்கையின் அர்த்தத்தை
நேற்று வரை
நான்
பிறந்ததை தான்
பெரிதாக யோசித்தேன்
இன்று முதல்
என்
இறப்பை கூட
இயல்பாக எண்ணுகிறேன்
நிச்சயமாக
என் பிறப்புக்கும்
இறப்புக்குமான
இறை தூதுவன்
நீ
ஒருவன் தான்
நீயே
எதிர் பார்க்காத
உன் பிரிவு
உனக்கு மட்டுமல்ல
எனக்கும் தான்
மரண அதிர்ச்சி
ஊருக்கெல்லாம்
தெரிந்தது
உன்
உடைந்து போன
உருவம்
மட்டும் தான்
உறவுக்கெல்லாம்
தெரிந்தது
உன்
தளர்ந்து போன
நடை
மட்டும் தான்
எனக்கு
மட்டும் தான்
உணர்த்தியிருக்கிறாய்
உன்
கந்தல் கோலத்தின்
கம்பீரத்தை
என்னிடம்
மட்டும் தான்
தந்து சென்றாய்
உன்
இலட்சியத்தின்
எஞ்சிய பகுதியை
வெறும்
துன்பத்தை கண்ட
தந்தை என்றாலும்
ஒரு
இன்பத்தையும் தராத
மகன் என்றாலும்
உன்னால்
மட்டும் தான்
முடியும்
இறக்கும் போதும்
எனக்காக அழ !
உன்னால்
ReplyDeleteமட்டும் தான்
முடியும்
இறக்கும் போதும்
எனக்காக அழ ......