என்ன
விளையாட்டு இது
என்றும்
ஆடும் வாழ்க்கை
யார் துவக்கம்
யார் முடிவு
நான் எப்போது
இணைந்தேன்
இதை
ஆடும் முறையென்ன
இதற்கு
தேவைப்படும் பொருளென்ன
பணம்
சேர்க்க வேண்டுமா
புகழ்
சேர்க்க வேண்டுமா
பிள்ளைகளை
பெற்றெடுக்க வேண்டுமா
நன்கு
வளர்க்க வேண்டுமா
காதலிக்க
தெரிய வேண்டுமா
காதலியை கைப்பிடிக்க
தெரிய வேண்டுமா
படித்து பட்டம்
பெற வேண்டுமா
பதவியை தட்டிப்
பறிக்க வேண்டுமா
ஊர் சுற்றி
பார்க்க வேண்டுமா
ஓரிடத்தில்
உட்கார்ந்திருக்க வேண்டுமா
பணக்காரனும் வாழ்கிறான்
பிச்சைக்காரனும் வாழ்கிறான்
சன்யாசியும் வாழ்கிறான்
சம்சாரியும் வாழ்கிறான்
ஆணழகனும் வாழ்கிறான்
ஊனமுற்றவனும் வாழ்கிறான்
மானமுள்ளவனும் வாழ்கிறான்
மானமற்றவனும் வாழ்கிறான்
வீரனும் வாழ்கிறான்
கோழையும் வாழ்கிறான்
வென்றவனும் வாழ்கிறான்
தோற்றவனும் வாழ்கிறான்
எல்லோரும் உறவினர்கள்
என்கிறார்கள்
ஒருவருக்கொருவர்
உதவிக் கொள்ள
மறுக்கிறார்கள்
எல்லோரையும் குடும்பமாக
பிரிக்கிறார்கள்
ஒரு சாரர்
குடும்பங்களை தனியாக
ஒதுக்கி விடுகிறார்கள்
எது தான்
முடிவென்றால்
மரணம் தான்
என்கிறார்கள்
சரி தான்
செல்லோவெம் என்றால்
உன் வாழ்க்கை
சரியில்லை என்கிறார்கள்
நீதி என்கிறார்கள்
நியாயம் என்கிறார்கள்
சட்டம் என்கிறார்கள்
சிக்கல் என்கிறார்கள்
வெறும்
சதை பிண்டம்
தான் உடல்
பெரும்
சர்ச்சை பண்டம்
தான் உயிர்
வேறென்ன
விலங்குக்கும் மனிதனுக்கும்
வேறுபாடு
அறிவு
அறிவு தான்
அனைத்திற்கும் ஆரம்பம்
இன்னும்
எண்ணற்ற கோடி
அறிவிலிகள்
அவர்களையும்
இழுத்து கொண்டு
அறிவாளிகள்
உண்மையில்
திறமைசாலிகளின்
ஆட்டத்திற்குள்
தெரிந்தே
சேர்த்து கொண்டார்கள்
மக்களையும் மாக்களையும்
ஒன்றாக
வெற்றியாளர்களின்
விளையாட்டு சுவாரசியத்திற்கு
பலியாவது
பாமர குடிமக்கள்
நீ மாறு
நீ மாறு
முன்னேறு
முன்னேறு - என்று
சொல்லி சொல்லியே
மனிதனை எந்திரமாய்
மாற்றி விட்டார்கள்
ஆயிரம் மேய்ப்பர்களும்
கோடி
ஆட்டு மந்தைகளும்
மட்டுமே மைதானத்தில் !
விளையாட்டு இது
என்றும்
ஆடும் வாழ்க்கை
யார் துவக்கம்
யார் முடிவு
நான் எப்போது
இணைந்தேன்
இதை
ஆடும் முறையென்ன
இதற்கு
தேவைப்படும் பொருளென்ன
பணம்
சேர்க்க வேண்டுமா
புகழ்
சேர்க்க வேண்டுமா
பிள்ளைகளை
பெற்றெடுக்க வேண்டுமா
நன்கு
வளர்க்க வேண்டுமா
காதலிக்க
தெரிய வேண்டுமா
காதலியை கைப்பிடிக்க
தெரிய வேண்டுமா
படித்து பட்டம்
பெற வேண்டுமா
பதவியை தட்டிப்
பறிக்க வேண்டுமா
ஊர் சுற்றி
பார்க்க வேண்டுமா
ஓரிடத்தில்
உட்கார்ந்திருக்க வேண்டுமா
பணக்காரனும் வாழ்கிறான்
பிச்சைக்காரனும் வாழ்கிறான்
சன்யாசியும் வாழ்கிறான்
சம்சாரியும் வாழ்கிறான்
ஆணழகனும் வாழ்கிறான்
ஊனமுற்றவனும் வாழ்கிறான்
மானமுள்ளவனும் வாழ்கிறான்
மானமற்றவனும் வாழ்கிறான்
வீரனும் வாழ்கிறான்
கோழையும் வாழ்கிறான்
வென்றவனும் வாழ்கிறான்
தோற்றவனும் வாழ்கிறான்
எல்லோரும் உறவினர்கள்
என்கிறார்கள்
ஒருவருக்கொருவர்
உதவிக் கொள்ள
மறுக்கிறார்கள்
எல்லோரையும் குடும்பமாக
பிரிக்கிறார்கள்
ஒரு சாரர்
குடும்பங்களை தனியாக
ஒதுக்கி விடுகிறார்கள்
எது தான்
முடிவென்றால்
மரணம் தான்
என்கிறார்கள்
சரி தான்
செல்லோவெம் என்றால்
உன் வாழ்க்கை
சரியில்லை என்கிறார்கள்
நீதி என்கிறார்கள்
நியாயம் என்கிறார்கள்
சட்டம் என்கிறார்கள்
சிக்கல் என்கிறார்கள்
வெறும்
சதை பிண்டம்
தான் உடல்
பெரும்
சர்ச்சை பண்டம்
தான் உயிர்
வேறென்ன
விலங்குக்கும் மனிதனுக்கும்
வேறுபாடு
அறிவு
அறிவு தான்
அனைத்திற்கும் ஆரம்பம்
இன்னும்
எண்ணற்ற கோடி
அறிவிலிகள்
அவர்களையும்
இழுத்து கொண்டு
அறிவாளிகள்
உண்மையில்
திறமைசாலிகளின்
ஆட்டத்திற்குள்
தெரிந்தே
சேர்த்து கொண்டார்கள்
மக்களையும் மாக்களையும்
ஒன்றாக
வெற்றியாளர்களின்
விளையாட்டு சுவாரசியத்திற்கு
பலியாவது
பாமர குடிமக்கள்
நீ மாறு
நீ மாறு
முன்னேறு
முன்னேறு - என்று
சொல்லி சொல்லியே
மனிதனை எந்திரமாய்
மாற்றி விட்டார்கள்
ஆயிரம் மேய்ப்பர்களும்
கோடி
ஆட்டு மந்தைகளும்
மட்டுமே மைதானத்தில் !
No comments:
Post a Comment