உதடுகள் சேராத
காதலுக்கு
உள்ளங்கள் சேர்ந்தன !
அதிர்ச்சி
பேசாமல் பேசும்
உன் மவுனம்
ஒருமுறை கூட
பேசாமல் போனது
நம்
காதலை மட்டுமல்ல
உன்
மறுப்பையும் தான் !
பூ
தினந்தோறும்
கசக்கி எறியப்பட்டாலும்
மனம் தளராமல்
போராடும்
ஊமை காதலன் !
வெறுப்பு
ஆழமான
உன் விருப்பத்தின்
கோபமான அகராதி !
சிரிப்பு
இருக்கு என்று
சொல்லி
இல்லை என்று
மறைக்கும்
உன் இயல்பான
சம்மதம் !
குங்குமம்
தொட்டும்
அழிக்க முடியாமல்
தோற்றுப் போகும்
வியர்வை
தொடாமலே
அழித்து விட்டு
வற்றிப் போகும்
கண்ணீர் !
அழகு
எப்போதும்
உன் கைபையில்
சாதனமாக குடியிருக்கும்
எப்போதாவது
என் கண்ணில்
உன் முகமாக
வந்து செல்லும் !
காதல்
உன் மானத்தின்
ஆயுள் காப்பீடு
என் மனதின்
அன்றாட முதலீடு !
No comments:
Post a Comment