Tuesday, February 15, 2011

துளிகள் - 5


விந்தை 

உதடுகள் சேராத
காதலுக்கு
உள்ளங்கள் சேர்ந்தன !

அதிர்ச்சி

பேசாமல் பேசும்
உன் மவுனம்
ஒருமுறை கூட
பேசாமல் போனது
நம்
காதலை மட்டுமல்ல
உன்
மறுப்பையும் தான் !


பூ

தினந்தோறும்
கசக்கி எறியப்பட்டாலும்
மனம் தளராமல்
போராடும்
ஊமை காதலன் !


வெறுப்பு 

ஆழமான
உன் விருப்பத்தின்
கோபமான அகராதி !


சிரிப்பு 

இருக்கு என்று
சொல்லி
இல்லை என்று
மறைக்கும்
உன் இயல்பான
சம்மதம் !


குங்குமம்

தொட்டும்
அழிக்க முடியாமல்
தோற்றுப் போகும்
வியர்வை
தொடாமலே
அழித்து விட்டு
வற்றிப் போகும்
கண்ணீர் !


அழகு 

எப்போதும்
உன் கைபையில்
சாதனமாக குடியிருக்கும்
எப்போதாவது
என் கண்ணில்
உன் முகமாக
வந்து செல்லும்   !


காதல் 

உன் மானத்தின்
ஆயுள் காப்பீடு 
என் மனதின்
அன்றாட முதலீடு !

No comments:

Post a Comment