உங்களால் முடியும்
என்றால்
காதலுக்கு தண்டனை
காதலர்களுக்கு கொடுக்காதீர்கள்
அவர்கள்
குழந்தைகளுக்காக
இணைக்கப்பட்டவர்கள்
என் தந்தைக்கு
நூறு வரன்கள்
அமையும்
என் தாய்க்கும்
நூறு வரன்கள்
அமையும்
ஆனால்
எனக்கு
தாய் தந்தையாக
இந்த
இரண்டு வரன்களே
அமையும் !
கருவில் தானே
கலைந்து போகும்
உயிர்
ஒரு சொட்டு
கண்ணீரைக் கூட
கடன் கேட்பதில்லை
தாயால் கர்ப்பத்தில்
கலைக்கப்படும்
உடல்
ஒரு சிறு
வலியை கூட
உணர்வதில்லை
குழந்தையாகி
இறந்தால்
குடும்பத்தின் துக்கத்தை
எடுத்துச் செல்லும்
சிறுவனாகி
இறந்தால்
உறவினர்களின் கதறலை
பெற்று கொள்ளும்
இளைஞனாகி
மறைந்தால்
நண்பர்களின்
கண்ணீர் அஞ்சலியும்
கலந்து விடும்
உற்றவனாகி
மறைந்தால்
உடையவள்
உள்ளத்தை
உடைத்துச் செல்வான்
பெற்றவனாகி
பிரிந்தால்
பிள்ளைகள்
தலைஎழுத்தாய்
தங்கி விடுவான்
பெரியவராகி
இறந்தால்
அறுபதை கடந்தவராக
மறைந்தால்
வாழ்க்கையின்
வலிகளை கூட
அழச் செய்திருப்பான்
இவன்
கணக்கை யாரிடம்
தொடர்வது என்று !


No comments:
Post a Comment