Monday, February 28, 2011

துளிகள் - 6

கடவுளே கடவுளுக்கு 
எதிரியாவது 
மதவெறியர்களின் 
மனதில் மட்டுமே !









அணு உலைக்கும்
அணு குண்டுக்கும் 
என்ன வேறுபாடோ 
அதுதான் 
மத நெறிக்கும் 
மத வெறிக்கும் 
உள்ள வேறுபாடு !


 






நான்
இரவுகளை விற்று 
பகலில் வாழ 
ஆசைப்படுகிறேன் 
என் 
இளமையை விற்று 
முதுமையை 
காண விரும்புகிறேன் !






 
 
எரிய எரிய 
உருகி 
மறைந்துவிடும் 
மெழுகு அல்ல 
நான்
எரிச்சல் பட்டும்
தேற்றிக் கொண்டு
எரிச்சல் பட 
பழக்கப்பட்டவள்  !









ஒரு வேலை 
சோறு தான் 
தேவை என்றால் 
கூட்டாஞ்சோறு போதும் 

தனிமையை போக்கிட
திரு மணம்
வேண்டும் என்றால்
மணப்பெண் போதும

முதுமையில் உதவிட
மக்கட் செல்வம் 
அவசியம் என்றால் 
குழந்தைகள் போதும்
 
உனக்கு நானும் 
எனக்கு நீயும் 
உதவ வேண்டும் 
என்றால் 
நண்பர்கள் ஆகிடுவோம் 

ஊரும் நாடும் 
உனக்கும் எனக்கும் 
உடன் வர 
வேண்டும் என்றால் 
உறவினர்கள் ஆக்கிடுவோம் 

என்னை 
வென்றிட நீயும் 
உன்னை 
வென்றிட நானும் 
ஏன் நினைக்கிறோம் 

உன் உணவை 
நானும் 
என் உணவை 
நீயும் 
ஏன் உடைமையாக்கி 
உரிமை கொண்டாடுகிறோம் 

நீ 
திரைகடல் அலைந்து 
திரவியம் தேடும் 
திறமை பெற்றவனாக 
இருக்கலாம் 

நான் 
தெருவை சுற்றிவிட்டு 
பொருக்கி தின்னும் 
பொறுப்பு அற்றவனாக
இருக்கலாம் 

என்னை 
அடிமையாக்கி கூலியாக
தரும் பணத்தை 
ஏன்
மனிதனாக்கி வேலையாக 
தரக் கூடாது 

இருவரும் 
ஒரு திண்ணையில் 
தவழ்ந்து 
ஒரு பள்ளியில் 
படித்தவர்கள் மட்டுமல்ல 
 
ஒரே உலகத்தில் 
பிறந்து 
ஒரே மண்ணில் 
இறக்க 
போகிறவர்களும் தான் !
 

No comments:

Post a Comment