நான் பிறந்ததும்
என் வாழ்வின்
மணித்துளிகள்
இறக்க
ஆரம்பித்துவிட்டன !
---------------x--------------------
விதியை
மதியால் வெல்வதும்
என்
தலைவிதி தான் !
---------------x--------------------
வெறும் காகிதம்
நான்
எனக்குள் எழுதப்படும்
கருப்பு வண்ண
எழுத்துக்களே
என் வாழ்க்கை !
---------------x--------------------
தோற்றப் பின்னும்
வாழ்க்கை இருக்கிறது
மீண்டும்
தோற்பதற்கு
வாய்ப்பு இருக்கிறது !
---------------x--------------------
பிறப்பவர்களை விட
பிறந்ததற்காக
வாழ்பவர்கள் அதிகம் !
---------------x--------------------
உன் உழைப்பின்
ஊதிய உயர்வான
ஒரு ரூபாய்
உல்லாசத்தின்
ஒரு படியில்
விழுவதால் தான்
இல்லாதவன் மடியில்
இன்னமும் ஏழ்மை !
---------------x--------------------
உன்னால்
கவனிக்கப் படாதவன்
தான்
பின்னாளில்
உன் முன்னால்
நிற்கிறான்
அவன்
எதிராளி அல்ல
உன்னால்
ஏமாற்றப்பட்ட
ஒரு ஏமாளி !
---------------x--------------------
பந்தைய களத்தில்
உன்னை
வெல்லப் போகிறவன்
உன்
பக்கத்து வீட்டுக்காரன் !
---------------x--------------------
உண்மையில்
உணவுப் பஞ்சமா
உறைவிடம்
பற்றாக்குறையா
ஏன் நமக்குள்
இத்தனை போட்டி
தான் என்ற
தற்பெருமையே காரணம் !
No comments:
Post a Comment