Saturday, July 16, 2011

வெளிச்சத்தின் விழிகளில்


எப்போதும் 
இரண்டாகி போகிறேன் 
வெளிச்சத்தின் விழிகளில்..

இரவுக்கு
மட்டுமே தெரியும்
நான்
யாரென்ற உண்மை

உங்கள்
பார்வை பட்டு
இரண்டாக உடைகிறேன்

நான்
பங்கப்பட்டு
பகுதியாக பிரிகிறேன்

உங்களுக்கான
என்னை
முன்னால் நிறுத்துகிறேன்

நீங்கள்
வெளிச்சத்தின்
பின்னால் நிற்கும்போது

எனக்கான
உங்களை
எனதாக்க எண்ணும்போது

உங்கள்
வெளிச்சத்தை
மறைத்து விடுகிறேன்

வெளிச்சம்
என்னை
உலகுக்கு காட்டுகிறது

இரவு
உண்மையை
எனக்கு காட்டுகிறது

இருவரும்
ஒருவரை ஒருவர்
உருமாற்ற
முயற்சி செய்கிறோம்

இயற்கை
பரிணாமம் இல்லாமல்
நிறம்
ஏற்றி கொள்கிறோம்

உடை
மாற்றி கொள்கிறோம்
உடலை
மறைத்து கொள்ள

நடை
மாற்றி செல்கிறோம்
நாகரிகத்தை
வளர்த்துக் கொள்ள

முடி
திருத்தி கொள்கிறோம்
முகத்தை
மெருகேற்றி கொள்கிறோம்

நகம்
வெட்டி கொள்கிறோம்
நளினமாக
பேசி பழகுகிறோம்

தூசு
படாமல்  இருக்கவும்
தும்மல்
வராமல் இருக்கவும்

நம்மை நாமே
துன்புறுத்தி கொள்கிறோம்
நாளுக்கு நாள்
பன்படுத்தி கொள்கிறோம்

இறுதியில்
இரவில் கூட
ஒருவனாக  முடியாமல்
தோற்று போகிறோம்

எந்நேரமும்
முன்னேற எண்ணி
பின்னோக்கி பார்க்க
மறந்து விடுகிறோம்

எந்தவொரு
பிடிப்பும் இல்லாமால்
விழுந்து கொண்டிருக்கும்
நம் நிழலை
நிஜத்தின் மறுபக்கத்தை !

1 comment:

  1. எந்நேரமும்
    முன்னேற எண்ணி
    பின்னோக்கி பார்க்க
    மறந்து விடுகிறோம்..super da nanba..

    ReplyDelete