உன்னால்
உடைந்து போன
என் தாய்
உன்னையே
உயிர் காத்த
என் அன்னை
ஒதுங்கி நிற்கிறாள்
தன்
உறுதி குலைந்து
ஒடுங்கி விட்டாள்
தன்
உள்ளம் நொந்து
உன்னை மட்டுமே
நம்பி வந்தவள்
சின்ன வயதில்
தகப்பனை இழந்தவள்
என்னென்ன துன்பங்கள்
அனுபவித்தாள்
என்பதை அறிந்தவன்
எனக்கும் மேலாக
அவள் வளையல்கள்
உடைக்கப்பட்டன
அவள் குங்குமம்
அழிக்கப்பட்டது
அவள் தாலி
அறுக்கப்பட்டது
நூல் சேலை
கொடுக்கப்பட்டது
எந்த உலகம்
உன்னை
ஒழித்து விட்டதோ
அந்த உலகம்
அன்னையை
ஒதுக்கி விட்டது
எந்த இலட்சியம்
உங்களின்
உயிர் மூச்சானதோ
அந்த இலட்சியம்
உயிர்
மூச்சை விட்டது
வெறும்
துரும்பாகி விட்டாள்
இரும்பு
மனதை இழந்து
துயரம் அடைகிறாள்
ஓரம்
ஒதுங்கி சென்று
எந்த
நல்ல காரியமும்
நடக்காதம்
அவள் தொடங்க
எந்த
நல்ல நேரமும்
நெருங்காதம்
அவள் நடக்க
வேறு
ஒரு நாதியும்
இல்லை
உங்களை தவிர
எங்களை வளர்க்க
இன்றும்
வேலை பார்க்க
செல்பவள் அவள்
உன்னை
இல்லாமல் செய்து
என்னை
ஏமாற்றிய உலகம்
அன்னையை
இருக்கச் செய்தும்
என்னை
ஏமாற்றப் பார்க்கிறது
என்
இன்பங்களை பகிர
அன்னைக்கும் தந்தைக்கும்
அறுகதை
இல்லை என்று !
உன்னை
ReplyDeleteஇல்லாமல் செய்து
என்னை
ஏமாற்றிய உலகம்
அன்னையை
இருக்கச் செய்தும்
என்னை
ஏமாற்றப் பார்க்கிறது...extremly goood my dear...