Sunday, July 17, 2011

எந்தையே - 28

ஒரு தந்தைக்கு
ஈடாகாத
பெரிய  உலகம்

எந்தையின் அன்புக்கு
இணை செய்யாத
விந்தை உலகம்

ஒரு நூறு
முறை
சிறுபிள்ளை
போன்று

கல்லூரி
செல்லும் வயதிலும்
கை அசைத்து
வழி அனுப்பினாய் 

ஒரே  ஒரு
முறை
உடன் வந்த
அடுத்த வீட்டுக்காரர்

வாசம் கூட
அறியாத
மதுக்கடை வாசலில்
காக்க வைத்தார்

விரட்டி விரட்டி
அடித்தாய் 
வடக்கு  வயலுக்கு
விளையாட சென்றதற்கு

நெல் வயலில்
வேலை பார்க்கும்
ஆட்களிடம்
வம்பு செய்ததே
விவசாய பாடம்

எலுமிச்சை  மரத்தின்
பழம் உலுக்குவது
பற்றி
எதுவும் தெரியாமல்

பக்கத்து வீட்டுக்காரரை
உதவிக்கு அழைத்தால்
வேலையிருகிறது என்று
விலகி செல்கிறார்

ஒவ்வொரு தந்தைக்கும்
மகனுண்டு
உயிருக்கு உயிராய்
உணர்வுகளை பகிர்ந்திட

அவரவர் வாழ்க்கையிலும்
ஆயிரம்
இன்னல்கள் உண்டு
இடைவிடாமல் உழைத்திட

எனது
வருத்தம் எல்லாம்
இவர்கள்
ஒவ்வொரு முறையும்

உனக்கு
துன்பம் தருகையில்
என்னை
ஏன்  மறந்தார்கள்

குற்ற உணர்வு
சிறிதும் இல்லாத
கொலை செய்யாத
குற்றவாளிகள் இவர்கள்

தகாத வார்த்தைகள்
பேசி
தற்கொலை செய்ய
தூண்டும் கொலைகாரர்கள்

சிறு சிறு
தவறென்று
தண்டனை இல்லாமல்
தலையை  கொய்யும்
தவறான  உறவுக்காரர்கள் 

தந்தையை இழந்த
மகனையும்
விட மாட்டார்கள்
மகனை இழந்த
தந்தையையும்
விட மாட்டார்கள்

தான் வாழ
தன்னை
சுற்றி உள்ளவர்களை
சொந்தமென்று சொல்லி
கொல்லும் களைகள் !

No comments:

Post a Comment