உலகம் தெரியாத
ஒரு பிள்ளை
உலகம் அறியாத
சிறு பிள்ளை
இரண்டுக்கும் நடுவில்
உறவுகள் தொல்லை
உடலினை கவனிக்க
இடைவெளி இல்லை
உன்னை கவனிக்க
உன்னிடமே
கேட்டுக் கொண்ட
பக்தன் நான்
என்னை நினைத்து
அனுதினமும்
கவலை பட்ட
கடவுள் நீ
சிறை வாசல்
வரை
சுமந்து சென்றாய்
எங்கள் சிலுவைகளை
உயிர் மூச்சை
கொடுத்து
அவிழ்த்து விட்டாய்
மக்கள் சிக்கல்களை
பெரியதொரு
விருப்பம் இல்லை
பொறியியல்
படிப்பேன் என்று
அரியதொரு
வெற்றியை பெற்றாய்
ஊரின் - முதல்
பொறியியல் பட்டதாரியாக்கி
ஊழ் வினையாக
எதிரிகள்
செய்வினையாக
கண் போகாவிடில்
இன்னொரு மகனையும்
இமயம்
ஏற்றி இருப்பாய்
என்போல் மாற்றியிருப்பாய்
விதி வலியாதாய்
நின்றது
எதிரிகள் நிறைந்த
உன் வாழ்வில்
விடா முயற்சியில்
வென்றாய்
அன்னை உனக்கு
துணையாய் நிற்க
உன்னை யாரும்
தோற்கடிக்க வில்லை
நீ யாரிடமும்
தோற்றிடவும் இல்லை
இறுதி வரை
உன்னை
விரட்டி வந்தார்கள்
மிரட்டி பார்த்தார்கள்
சிறுதும் அஞ்சாமல்
என்றும்
சிரித்து கொண்டே
சாதித்தவன் நீ
உன்னை சோதித்தவர்கள்
இன்று
சொல்லிக் கொள்ளலாம்
தோற்கடித்து விட்டதாய்
மண்ணில் வாழும்
மனிதர்களுக்கே
வெற்றி தோல்வி - என்று
அறியாதவர்கள் அவர்கள்
என்னை பார்த்து
சிலர்
ஏளனமாய் சிரிக்கலாம்
உன்னை இழந்ததால்
உண்மை என்னவென்றால்
இனி தான்
ஆரம்பம்
என் வாழ்க்கை !
No comments:
Post a Comment