Sunday, July 17, 2011

புன்னகை போதும்



புன்னகைத்து விடு
போதும்
பொன் நகை 
தேவையில்லை

கண்ணசைத்து விடு
போதும்
பண் இசைத்திடும் 
புண்பட்ட உள்ளம்

உயிர் வாழ
உழுது கொண்டிருந்த
உலகம்
மாறி விட்டது

வாழ்க்கை உயர
உழைக்க வேண்டிய
நேரம்
வந்து விட்டது

பொழுதுகள் நிறைந்த
பொழுது போக்குகள்
குறைந்த
பெற்றவர்கள் காலம்

சிறுக சிறுக
செல்வம் சேர்த்து
பெரிதாய்
வாழ்ந்த வாழ்க்கை

பொழுதுகள்  குறைந்த
பொழுது  போக்குகள்
நிறைந்த 
பிள்ளைகள் காலம்

வரவை தாண்டி
செலவு  நிற்கும்
சிரமமான
சிக்கன வாழ்க்கை

மோட்டார் வாகனத்தில்
ஊர்வலம் வரும்
அவசரத்தில்
கோயில் பூசாரி

மூடிய கதவை
திறந்து பார்க்க
நேரமின்றி
விடுமுறை ஓய்வு

உறவுகள் துறந்து
ஓடுகிறோம்
இரவுகள் மறந்து
உழைக்கிறோம்

அறிவியல் வளர்ச்சியில்
ஆயிரம் வசதிகள்
இருந்தாலும்
அசதியில் மறக்கிறோம்

அன்னை தந்தையின்
நலம் விசாரிக்க
அண்ணன் தங்கையின்
அன்பை பகிர

மனைவி
மக்களை கூட
துணைக்கு
அழைக்க முடியாத

தூர தேச
வாழ்க்கையில்
தொலைந்து போகும்
கனவுகள்

புதிய புன்னகைகளில்
மதங்களை
மறந்து விட்டு
உறவுகளை நாடுகிறோம்

பெரிய சிரமங்களில்
சடங்குகளை
துறந்து விட்டு
சம்பரதாயங்களை செய்கிறோம்

பொருள் ஆதாரம்
என்னும் பேரலையில்
புதைந்து போனது
பழமையான முறைகள்

மாடு கூட
குடிநீர் குழாயில்
தாகம்
தீர்க்க பழகுகிறது

நாய்  கூட
குட்டையான
வாலை - ஆட்ட
நேரமின்றி பறக்கிறது

ஆடி பண்டிகையில்
மூடிய  உணவகத்தை
அக்கறையுடன் சொன்ன
பெட்டிகடை காரரின்

வாழைப் பழத்தை
விட இனிமையானது
அவர்
வாஞ்சையுடன் சிரித்த
சிரிப்பு !

No comments:

Post a Comment