நான்
வயதுக்கு
வந்துவிட்டேன்
உந்தன்
கண்
பார்த்த போதே
என்
வயது
கடந்து விட்டது
என்னை
பெண்
பார்த்த போது !
கண்கள்
பட்டு பட்டு
கனிந்த பிறகும்
உன்
கரங்கள் பட்டு
நாணம் வருவது
பெண்மையின் அதிசயம் !
கல்லூரி முடிந்ததும்
கிடைத்தது
கைப்பை மட்டுமே
அதில்
உனக்காக சேர்த்ததுஎனக்கான
அழகு சாதனங்கள் !
சம உரிமை
பெற்று விட்டேன்
உனக்கு
அதிகாரியாய் அமர
சமைந்த பின்னும்
மறந்து விட்டாய்
என்னை
அருகில் அமர்த்த !
அருகருகே நிற்கிறோம்
அறியாமல்
உரசிக் கொள்கிறோம்
அவரவர்
அலுவல்களில் பிரிகிறோம்
இருவருக்கும் இடையில்
யார் போட்டது
இந்த
இலட்சுமணக் கோடு !
கொலை
செய்வது பாவம்
தற்கொலை
செய்வதும் பாவம்
பெண்ணை
சிறை எடுக்கும்
பழக்கத்தை
ஒழித்த சமுதாயம்
என்னை நானே
சிறை படுத்தி
கொள்வதை
ஏளனமாய் ரசிக்கிறது !
என்னை
வழி மறித்து
காதலிக்க
மனு போட்ட
நூறு பேரில்
என்
தந்தையை
இடை மறித்து
பெண் கேட்க
துணிவில்லாதோர்
நூறு பேர் !
No comments:
Post a Comment