Sunday, June 5, 2011

துளிகள் - முதிர்கன்னி

நான் 
வயதுக்கு 
வந்துவிட்டேன் 
உந்தன்
கண்
பார்த்த போதே 

என் 
வயது 
கடந்து விட்டது 
என்னை 
பெண் 
பார்த்த போது !
 
கண்கள் 
பட்டு பட்டு 
கனிந்த பிறகும் 
உன் 
கரங்கள் பட்டு 
நாணம் வருவது 
பெண்மையின் அதிசயம் !
 
கல்லூரி முடிந்ததும் 
கிடைத்தது 
கைப்பை மட்டுமே 
அதில் 
உனக்காக சேர்த்தது
எனக்கான 
அழகு சாதனங்கள் !

சம உரிமை
பெற்று விட்டேன்
உனக்கு
அதிகாரியாய் அமர

சமைந்த பின்னும்  
மறந்து விட்டாய்
என்னை
அருகில் அமர்த்த !

அருகருகே நிற்கிறோம்
அறியாமல்
உரசிக் கொள்கிறோம்
அவரவர்
அலுவல்களில் பிரிகிறோம்  

இருவருக்கும் இடையில்
யார் போட்டது
இந்த
இலட்சுமணக் கோடு  !

கொலை
செய்வது பாவம்
தற்கொலை
செய்வதும் பாவம்

பெண்ணை
சிறை எடுக்கும்
பழக்கத்தை
ஒழித்த சமுதாயம்

என்னை நானே
சிறை படுத்தி
கொள்வதை
ஏளனமாய் ரசிக்கிறது !

என்னை
வழி மறித்து
காதலிக்க
மனு போட்ட
நூறு பேரில்

என்
தந்தையை
இடை மறித்து
பெண் கேட்க
துணிவில்லாதோர்
நூறு பேர் !
 

No comments:

Post a Comment