செல்வத்தில்
பிறந்தவன்
நீ
செல்லமாய்
வளர்ந்தவன்
நீ
ஊரார் சொல்ல
கேட்டவன்
நான் !
துன்பத்தில்
வாழ்ந்தவன்
நீ
துயரத்தில்
வீழ்ந்தவன்
நீ
என் கண்ணார
கண்டவன்
நான் !
அகட விகடம்
அறியாதவன்
நீ
பகடைக் காயாய்
ஆக்கப்பட்டவன்
நீ
இன்றும் அனுபவித்து
அறிகிறேன்
நான் !
முன்னேற
துடித்தவன்
நீ
முட்டுகட்டைகளால்
நொடிந்தவன்
நீ
உன் முயற்சியின்
முதல்படி
நான் !
தந்தை
என்பவன்
நீ
தாயும்
ஆனவன்
நீ
உன் அன்பில்
நனைந்தவன்
நான் !
இன்பங்களை
எதிர்பார்த்தவன்
நீ
இன்னல்களை
எதிர்நோக்கியவன்
நீ
இன்றும் உணர்கிறேன்
ஏமாற்றங்களை
நான் !
சாமானிய
மனிதன்
நீ
சராசரியாய்
வாழ்ந்தவன்
நீ
உன் சோதனைகளை
சுமக்கிறேன்
நான் !
செதுக்காத
சிற்பம்
நீ
செல்லிலும் உளி
தாங்கியவன்
நீ
உன் சாவில்
உடைந்த
இதயத்தில் உணர்ந்தேன்
நான் !
பிறந்தவன்
நீ
செல்லமாய்
வளர்ந்தவன்
நீ
ஊரார் சொல்ல
கேட்டவன்
நான் !
துன்பத்தில்
வாழ்ந்தவன்
நீ
துயரத்தில்
வீழ்ந்தவன்
நீ
என் கண்ணார
கண்டவன்
நான் !
அகட விகடம்
அறியாதவன்
நீ
பகடைக் காயாய்
ஆக்கப்பட்டவன்
நீ
இன்றும் அனுபவித்து
அறிகிறேன்
நான் !
முன்னேற
துடித்தவன்
நீ
முட்டுகட்டைகளால்
நொடிந்தவன்
நீ
உன் முயற்சியின்
முதல்படி
நான் !
தந்தை
என்பவன்
நீ
தாயும்
ஆனவன்
நீ
உன் அன்பில்
நனைந்தவன்
நான் !
இன்பங்களை
எதிர்பார்த்தவன்
நீ
இன்னல்களை
எதிர்நோக்கியவன்
நீ
இன்றும் உணர்கிறேன்
ஏமாற்றங்களை
நான் !
சாமானிய
மனிதன்
நீ
சராசரியாய்
வாழ்ந்தவன்
நீ
உன் சோதனைகளை
சுமக்கிறேன்
நான் !
செதுக்காத
சிற்பம்
நீ
செல்லிலும் உளி
தாங்கியவன்
நீ
உன் சாவில்
உடைந்த
இதயத்தில் உணர்ந்தேன்
நான் !
No comments:
Post a Comment