Tuesday, June 7, 2011

எந்தையே - 16

செல்வத்தில்
பிறந்தவன்
நீ

செல்லமாய்
வளர்ந்தவன்
நீ

ஊரார் சொல்ல
கேட்டவன்
நான் !

துன்பத்தில்
வாழ்ந்தவன்
நீ

துயரத்தில்
வீழ்ந்தவன்
நீ

என் கண்ணார
கண்டவன்
நான் !

அகட விகடம்
அறியாதவன்
நீ

பகடைக் காயாய்
ஆக்கப்பட்டவன்
நீ

இன்றும் அனுபவித்து
அறிகிறேன்
நான் !

முன்னேற
துடித்தவன்
நீ

முட்டுகட்டைகளால்
நொடிந்தவன்
நீ

உன் முயற்சியின்
முதல்படி
நான்  !

தந்தை
என்பவன்
நீ

தாயும்
ஆனவன்
நீ          

உன் அன்பில்
நனைந்தவன்
நான் !

இன்பங்களை
எதிர்பார்த்தவன் 
நீ

இன்னல்களை
எதிர்நோக்கியவன்
நீ  

இன்றும் உணர்கிறேன்
ஏமாற்றங்களை
நான் !

சாமானிய
மனிதன்
நீ

சராசரியாய்
வாழ்ந்தவன்
நீ

உன் சோதனைகளை
சுமக்கிறேன்
நான் !

செதுக்காத
சிற்பம்
நீ

செல்லிலும் உளி
தாங்கியவன்
நீ

உன் சாவில்
உடைந்த
இதயத்தில் உணர்ந்தேன்
நான் !          

No comments:

Post a Comment