Saturday, June 18, 2011

எந்தையே - 19

மவுனமாக நிற்கின்றன  
உன் 
மனையின் 
மரம் மட்டைகள் 

மரமாக இருக்கின்றன 
உன் 
சொத்தின் 
நிலம் நீட்சிகள் 
 
நூறு முறை 
போரடியிருப்பாய் 
இவைகளை 
காப்பாற்றி பாதுகாக்க 

ஆயிரக் கணக்கில் 
அள்ளி 
இறைத்திருப்பாய் 
அவைகளை 
பிரியாமல் இருக்க 

கல்லு போன்று 
இருக்கின்றன 
இந்த 
காணி நிலங்கள் 

கண்டும் காணமல் 
சிரிக்கின்றன 
அந்த 
வானம் பார்த்து 

என் 
உழவின் கரங்கள் 
ஒட்டவில்லை 
இந்த மண்ணோடு 

உன் 
நெற்றி வியர்வை
நிலத்தில்
தெரிகிறது இரத்தமாக

என் 
பிறந்த உடலை 
தாங்கி
பெருமைப்பட்ட வீடு 

உன் 
இறந்த உடலை 
ஏந்தி
இரங்கல்பட்டு விட்டது   

இடிந்து போனது 
தென்னை மரம் 
மட்டும் தான் 
உன் 
இறப்பிற்கு முன்னே 
விழுந்த இடியில்  

இன்னும் 
தேக்கு நிற்கிறது 
தீர்க்கமாக 
தோப்பு இருக்கிறது 
துறவியாக 

கிணறு கூட
தண்ணீரில் தான்
மிதக்கிறது
கண்ணீர் இன்றி

உன்னை
அசைத்து பார்த்த
இந்த
அசையா சொத்துக்கள்

இன்று
அமைதியாக இருக்கின்றன
உன்
இறப்பை அறிந்தும்

வேலியோர
வேப்பமரம்

சலசலத்தபடி
நிற்கிறது
உன்
சாவின் செய்தியுடன் !

No comments:

Post a Comment