Thursday, June 16, 2011

எந்தையே - 18

நீ 
வாழ்க்கையில் 
வெற்றி 
பெற்றவன் தான் 

நான் 
வாழ்க்கையை 
வென்று 
கொண்டிருப்பதால் 

உன் 
விடா முயற்சியின் 
வெற்றியை 
நான் உணருகிறேன் 

என் 
விழித்திரையின் 
ஈரங்கள் 
உனை நினைவுட்டுவதால் 

நீ 
அனுபவிக்க தவறிய 
இன்பங்கள் - இன்று 
அணிவகுத்து நிற்கின்றன 

நான் 
எண்ணி எண்ணி 
பார்த்துவிட்டு - ஏக்கப் 
பெருமுச்சு  விடுகிறேன்

ஒருவேளை 
உணவில் 
ஒரு உருண்டை 
உனக்கு 
கணிக்கையாகிறது

சிறிது நேரத்தில் 
சத்தமின்றி 
சில எலிகள் 
அதை 
உண்டுவிடுகிறது    

உனக்கு 
படைத்துவிட்டு
காக்கைக்கு 
அன்னமிடுகின்றனர் 

கணக்காக 
வைக்கப்பட்ட 
கைப்பிடி சாதத்தை 
கூட்டத்துடன்  கொரிக்கிறது

மனது
ஆறவில்லை என்றால்
ஒரு
மனிதனுக்கு
விருந்து வைக்கிறார்கள்

பசியாற
உண்டு விட்டு
பதிலுக்கு
நன்றி சொல்லி
பிரிந்து செல்கிறான்  

என்னால் 
உணர முடிகிறது 
நீ 
இறந்து போனதை 

உன்னால்
உண்ண முடியாது
இந்த
அன்ன தானங்களை

நீ
எனக்கு தந்தை
நான்
உனக்கு மகன்

என்னை
நீ அறிவாய்
உன்னை
நான் அறிவேன்

சடங்குகள்
நடத்தும்
சம்பரதாய
பாடங்கள் இவை

கடமைகள்
ஆற்றும்
குழந்தைகள்
செய்யும் இதை

என்
கடவுளே நீ
தினம்
கண்ணில் தான்

உனை
நினைத்து நினைத்து
உருகுவதே
உள்ள களிப்பு

உன்
கனவை நினைவாய்
மாற்றுவதே
எண்ண துணிவு !

No comments:

Post a Comment