ஒவ்வொரு நாளும்
பிறக்கிறது
ஒரு நாள்
சோதனையாக
ஒவ்வொரு நாளும்
முடிகிறது
வாழ் நாள்
சாதனையாக
உண்ணும்
உணவில் கூட
போராட்டம்
உண்பவன்
யார் என்பதில்
உண்டு
முடித்தப் பின்னும்
தகராறு
உண்டது
எது என்பதில்
தண்ணீரும்
மண்ணோடு சேர்ந்து
மனம் நோக
செய்வதுண்டு
தென்றல் காற்று
கூட
தீண்ட தாகாமல்
போவதுண்டு
நாளை என்ற
நம்பிக்கை மட்டுமே
இன்றைய துன்பத்தை
இன்பமாக்கும் மருந்து
உயிர் என்ற
பொய் மட்டுமே
உடல் ஊனத்தை
மெய்யாக்கும் சிரத்தை
ஒரே இடத்தில்
நின்று
உயிர் வாழ
உரிமை பெற்ற
மரம்
உயர்வான பிறப்பு
ஓர் இடத்தில்
நிற்க
நேரம் இன்றி
சுற்றி திரியும்
என்
சோகத்தை நினைத்தால்
நிலையில்லாத வாழ்வில்
நிலையானது
நிலையில்லாத மாற்றம்
மட்டுமே
என்
கவச குண்டலம்
நான்
சுத்தப் படுத்தும்
என் கழிவறைகள்
என்
போதாத காலம்
நான்
பதிவு செய்யாத
என்
பிறப்பும் இறப்பும்
கரை
கட்டி தேக்கப்பட்ட
நீர் - பாசனம்
செய்யப்பட வேண்டும்
இல்லையேல்
பாசி பிடித்துவிடும்
வற்றாமல் ஓடும்
காற்றாற்று வெள்ளம்
வேலியிட்டுக்
கொள்வதில்லை
என்றாவது
வற்றிப் போனாலும்
வேதனைப்பட்டு
கொள்ளவதில்லை
விழுகிறேன் எழுகிறேன்
அறிகிறேன்
மீண்டும் விழலாம்
மீண்டு எழலாம்
மாண்டு
போகும் வரை
மாறி மாறி
தேறி கொள்ளும்
வாழ்க்கை
முடிந்தவரை
முயற்சி செய்
உன்னால்
முடிந்தவர்களுக்காக !
No comments:
Post a Comment