கற்பு
உண்டென்றால்
உன் உடையின்
நூலிழை கூட
நாணப்படும்
இல்லை என்றால்
என் எச்சிலில்
நனைவது கூட
நாகரிகம் !
வெட்கம்
புதுமைப் பெண்ணின்
பெருமை கண்டு
குறுகி நிற்கும்
ஆடையின்
அளவில் மட்டும்
புரட்சி பெண்ணின்
வீரம் காக்க
நிறைந்து நிற்கும்
ஆடையின்
நெருக்கத்தில் மட்டும் !
பார்வை
என்னை
நீ பார்க்கையில்
உன்னை
நான் பார்க்கையில்
அர்த்தம் புரிகிறது
அவள்
என்னை பார்க்கையில்
நான்
அவளை பார்க்கையில்
அர்த்தம் புரியவில்லை !
அவள்
என்
வினாடிகளில்
பங்கு கேட்கும்
அதிகாரம் பெற்றவள் !
நொடி
என்
வயது வகுபடும்
அதிகபட்ச நேரம் !
No comments:
Post a Comment