Wednesday, August 17, 2011

நயவஞ்சகம்

விழிகளில் வரும்
நடுக்கம்
வார்த்தைகளில் வரும் 
தடுமாற்றம்

புதிதாய் தோன்றும்
பாசம்
புதிராய் தோன்றும்
பழக்கம்

உணர முடிகிறது
ஒரு
உண்மை ஊமையாகி
கொண்டிருப்பதை

நினைவில் தெரிகிறது
ஒரு
செயற்கை தனம்
செயற்கரியதாய்

உயிர் வாழும்
போராட்டம்
உரிமை மீறலின்
நீரோட்டம்

உறவை தேடும்
உள்ளம்
தவறை மறைக்க
தஞ்சம்

கொஞ்சல்
அஞ்சி  அஞ்சி
கேட்கும்
அன்பு கெஞ்சல்

குழைவு
மிதம் மிஞ்சி
போகும்
பாவ மன்னிப்பு

முடியா தென்றால்
லஞ்சம்
முடியம் என்றால்
தண்டம்

கிடைக்கா தென்றால்
பொதுநலம்
கிடைக்கும் என்றால்
சுயநலம்

நீதி
நிறைய தடவை
செத்து போவது
சாமானியனின்
சகிப்புதனத்தில் தான்

நேர்மை
நேரத்திற்கு  நேரம்
சீர்கெட்டு போவது
ஏழையின் 
வாழ்க்கையில் தான்

சூன்யம்
வைக்க எண்ணும்
ஒரு
சூன்ய வாழ்க்கை

சாமிக்கு
சீட்டு கட்டும்
சில்லறை
சொந்தத்தின் சோகம்

விடியல்
வரவில்லை என்றால்
தடியெடுத்து
அடிக்கும் அபாயம்

புதையல்
கிடைக்கவில்லை என்றால்
பகைமையை
தோண்டும் பேராபத்து

மனிதன்
மிருகம் ஆகிறான்
மக்கள்
மாக்கள் ஆகின்றனர்

அறிவு
குறைபட்டு போனதால்
அன்பு
பிழைபட்டு போகிறது !

1 comment:

  1. நீதி
    நிறைய தடவை
    செத்து போவது
    சாமானியனின்
    சகிப்புதனத்தில் தான்.....nice ...

    ReplyDelete