விழிகளில் வரும்
நடுக்கம்
வார்த்தைகளில் வரும்
தடுமாற்றம்
புதிதாய் தோன்றும்
பாசம்
புதிராய் தோன்றும்
பழக்கம்
உணர முடிகிறது
ஒரு
உண்மை ஊமையாகி
கொண்டிருப்பதை
நினைவில் தெரிகிறது
ஒரு
செயற்கை தனம்
செயற்கரியதாய்
உயிர் வாழும்
போராட்டம்
உரிமை மீறலின்
நீரோட்டம்
உறவை தேடும்
உள்ளம்
தவறை மறைக்க
தஞ்சம்
கொஞ்சல்
அஞ்சி அஞ்சி
கேட்கும்
அன்பு கெஞ்சல்
குழைவு
மிதம் மிஞ்சி
போகும்
பாவ மன்னிப்பு
முடியா தென்றால்
லஞ்சம்
முடியம் என்றால்
தண்டம்
கிடைக்கா தென்றால்
பொதுநலம்
கிடைக்கும் என்றால்
சுயநலம்
நீதி
நிறைய தடவை
செத்து போவது
சாமானியனின்
சகிப்புதனத்தில் தான்
நேர்மை
நேரத்திற்கு நேரம்
சீர்கெட்டு போவது
ஏழையின்
வாழ்க்கையில் தான்
சூன்யம்
வைக்க எண்ணும்
ஒரு
சூன்ய வாழ்க்கை
சாமிக்கு
சீட்டு கட்டும்
சில்லறை
சொந்தத்தின் சோகம்
விடியல்
வரவில்லை என்றால்
தடியெடுத்து
அடிக்கும் அபாயம்
புதையல்
கிடைக்கவில்லை என்றால்
பகைமையை
தோண்டும் பேராபத்து
மனிதன்
மிருகம் ஆகிறான்
மக்கள்
மாக்கள் ஆகின்றனர்
அறிவு
குறைபட்டு போனதால்
அன்பு
பிழைபட்டு போகிறது !
நீதி
ReplyDeleteநிறைய தடவை
செத்து போவது
சாமானியனின்
சகிப்புதனத்தில் தான்.....nice ...