Monday, May 9, 2011

கா.தலைவி - 6


இதயம்
இடி இடிக்கிறது
இமைகள்
துடி துடிக்கிறது

இன்று
அவனை மீண்டும்
காணப் போகிறேன்    
என்று
எண்ணும் பொழுது

என்னை அறியாமல்
என்
நிலை மறக்கிறேன்

எனக்கே தெரியாமல்
நான்
எனை மறக்கிறேன்

ஊர் சென்று
திரும்பும் வரை
என்ன செய்திருப்பான்
என்
பெயர் கூட 
தெரியாமல்

மறந்திருப்பானோ
வேறு
பெண்ணை
நினைத்திருப்பானோ  

ஒரு கணம்
கண்கள்
கலங்கிவிட்டேன்

இனம் புரியா
வலியில்
அழுதுவிட்டேன்

பெண்ணாகி 
போனதால்
உன் முன்னே
சிலையாகி போகிறேன்

விருப்பு வெறுப்பு
எதுவும் சொல்லாமல்
உன்னை நெருப்பில்
நிறுத்துகிறேன்

பொங்கி வழியும்
என்
ஓர விழிப்பார்வையில்
உள்ளம்
அறிய துடிக்கிறாய்

ததும்பி வழியும்
என்
இறுக்க புன்னகையில்
உன்
எதிர்காலம் கணிக்கிறாய்

என்னப்
பெண்ணிவள் என்று
ஒருமுறை
நினைத்திருந்தால்
எந்த பெண்ணுக்கும்
காதல் கிடைத்திருக்காது

என்ன
செய்ய நான்
முகவரி தெரியா
உன் காதல்
என் முகவரி
மாற்றும் சக்தியுடையது

மவுனம் தான்
என்
மனதின் தூதுவன்
முடிந்தால்
மொழி  பெயர்ப்பு
செய்து கொள்

காத்திருப்பு தான்
என்
கன்னி ஆயுதம்

திருமணத்தில்
பறிக்கப்படும் முன்
நிருபித்து விடு
நீ எனக்கானவன்
என்று !

 

No comments:

Post a Comment