Wednesday, November 30, 2011

தெறிவின் ஓரத்தில்

உடைந்து விழும் 
உன்
உயிரின் வாழ்வை
ஒரு
சில் வண்டின்
ஓசை
உயிர்த்தெழ செய்யும்  

கவிழ்ந்து விழும்
உன்
கனவின் ஆசையை
ஒரு
கண்ணாடி துண்டு
காப்பாற்றி விடும்

கடிகார
சத்தம் கூட
கவலைகள்
மறக்கச் செய்யும்
காதின் ஓரத்தில்

காகித
அசைவு கூட
இசைவுகளை 
இயற்றி விடும்
இதய கூட்டுக்குள்

நீரின்
தொண தொணப்பு
நிலத்தின்
கலங்களின் மேனியை
நெகிழச் செய்யும்

காற்றின்
சுறு சுறுப்பு
கரையின்
ஓரங்களின் ஆரத்தை 
தூரமாக்க துடிக்கும்   

ஒரு
பருந்தின் அந்தரத்தில்
பறக்க விடப்படும் 
அற்ப எண்ணங்கள்

ஒரு
குரங்கின்  வாலில்
பட்டாசை  கொளுத்தும்
குறும்பு சிந்தனைகள்

நடக்க 
சாத்தியப் படாத
நொண்டி கனவுகள்
வண்டி  கட்டும்
வாழ்க்கை பயணத்திற்கு

இருட்டு பாதையில்
குருட்டு நம்பிக்கை
தெரு விளக்கை
ஏற்றி விடும்
திருவிழா தோரணம்
கட்டி விடும்

மிரட்டும்  உலகில்  
முரட்டு குணங்கள்
திருட்டு  தனங்களை
விரட்டி விடும்
திறமை  அனைத்தையும் 
வளர்த்து  விடும்  

எரிந்து விழும்
வரை 
ஒரு நட்சத்திரம்
எரிந்து
கொண்டே இருக்கும்

விழுந்து எழும்
வரை
மனிதனின் வாழ்க்கை
விழுந்து
கொண்டே  இருக்கும்

அகல் விளக்கின்
திரியை சுடும்
நெருப்பு தான்
ஒளி கொடுக்கும்

அடி மனதில்
வலியை தரும்
கேள்வி தான் 
வெற்றியின்
விடையை கொடுக்கும் !




No comments:

Post a Comment